Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 15 அக்டோபர், 2014

இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவதில்லை: பிரணாப் முகர்ஜி!

இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவது இல்லை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். நார்வேயில் ஐந்து நாள் பயணத்தைத் தொடங்கியுள்ள அவர் அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய முஸ்லிம்களில் யாரும் தீவிரவாத பாதையை தேர்ந்தெடுப்பது இல்லை. எல்லை தாண்டிய தீவிரவாதத்தால்தான் இந்தியா பாதிக்கப்படுகிறது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே 1972-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிம்லா ஒப்பந்தம், 1999-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட லாகூர் பிரகடனம் ஆகியவை மூலம் இருநாட்டுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்ற மலாலாவின் கோரிக்கை குறித்த‌ கேள்விக்கு, ‘இது பிரதமர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம், நான் கருத்து எதுவும் கூற முடியாது’ என்றார்.
நார்வே சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு பின்லாந்துக்கு பிரணாப் முகர்ஜி செல்கிறார். அப்போது இந்தியா, பின்லாந்து இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இதன்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் எரிசக்தியை தயாரிப்பது குறித்த தொழில்நுட்பத்தை பின்லாந்திடம் இருந்து இந்தியா பெற்றுக்கொள்ள இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக