Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 15 அக்டோபர், 2014

நோபல் பரிசு - அமைதி அரசியல்?

1931 ஆம் ஆண்டு காந்தி இலண்டன் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றபோது எடுத்த படம்
இவர் தான் எங்கள் முன்மாதிரி என்று வாழ்ந்த மார்டின் லூதர் கிங்.jr முதல் இன்றைய ஒபாமா வரையிலும் தேடிச் சென்ற நோபல் பரிசு, ஏன் நம் கிழவரை இதுவரை நெருங்கவில்லை?

78 ஆண்டுகள் வாழ்ந்த மகாத்மா காந்தி, தனது வாழ்நாளில் ஏறத்தாழ 50 ஆண்டுகள் அமைதி, அறவழியில் போராடி ஆங்கிலேயேர்களைப் பணிய வைத்ததின் மூலம் தன்னை, 20ம் நூற்றாண்டில் தோன்றிய “அமைத்திக்கான தூதுவர்” என்று உலகுக்கு அறிமுகம் செய்து கொண்டவர்.
ஆப்ரிக்காவின் இன/நிற வெறிப் போராட்டமாகட்டும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டமாகட்டும் கத்தியின்றி இரத்தமின்றி வென்று காட்டிய இந்த உத்தமரை உலகமே திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் இந்த ‘நோபல்’ தன் கண்களை மூடிக்கொண்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டு வரையிலும் பிரிட்டனைப் பகைத்துக்கொள்ள விரும்பாமல் தட்டிக்கழித்து சாக்கு போக்கு சொல்லி வந்த நார்வே, 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது தேர்வுப் பட்டியலை வெளியிட்டது. இல்லை.. இல்லை தன் உள்மனதை வெளியிட்டது என்று சொன்னால் அது மிகையில்லை.
“அமைத்திக்கான நோபல் பரிசினைப் பெற்றுக் கொள்ளத் தகுதியானவர் யாரும் உயிருடன் இல்லை ஆகையினால் 1948 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை.” என்பதுதான் அந்த அறிவிப்பு.
இந்த அறிவிப்பு வெளியான சில நாள்களிலேயே காந்தி சுட்டுக் கொல்லப்படுகிறார். நோபல் கமிட்டி சொன்னது போலவே அப்போது உலகில் அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற யாரும் உயிருடன் இல்லைதான்.
சரி, இறந்த பிறகாவது காந்தியை நோபல் அடையும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு கிடைத்த செய்தி, “அவரின் கொலையில் நிறைய சிக்கல் இருக்கிறது.” என்று காரணம் காட்டி மழுப்பியது.
இதுவரையிலும் ஐந்து முறை “அமைதி” நிராகரிக்கப்பட்டிருக்கிறது அவர்கள் சொல்லும் ”அமைதி”க்காக!
ஆஃப்கான், ஈராக் ஆகிய இடங்களில் அமைதி(?)யை நிலை நாட்டிய ஒபாமா போன்றோர்தான் நோபல் தேர்ந்தெடுக்கும் அமைதித் தூதுவர்கள்!
எங்கள் காந்தியை துறக்கும் உங்கள் ‘நோபலு’க்கு சாந்தியேது??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக