Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 23 அக்டோபர், 2014

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய முஸ்லிம் வர்த்தக பிரமுகரை ஆடையின்றி சோதனை : மதத்தை கூறி இழிவுப்படுத்தியதாக சுங்கத்துறையினர் மீது குற்றச்சாட்டு.....!!


சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய முஸ்லிம் வர்த்தக பிரமுகரை ஆடையின்றி சோதனை : மதத்தை கூறி இழிவுப்படுத்தியதாக சுங்கத்துறையினர் மீது குற்றச்சாட்டு.....!!
பேங்காக்கிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய சென்னை மண்ணடியை சேர்ந்த முஸ்லிம் வர்த்தக பிரமுகரை ஆடையின்றி சோதனை செய்து மதத்தை கூறி இழிவுப்படுத்தி உள்ளார்கள் சுங்கத்துறையினர்.

ஒரு மனிதன் தன்னுடைய உடலில் எதை எடுத்து வந்தாலும் ஸ்கேன் மூலம் கண்டறியும் வசதி இருக்கும் நிலையில், முஸ்லிம் பிரமுகரை முழு ஆடையையும் அவிழ்த்து விட்டு சோதனை செய்கிறார்கள் என்றால் நிச்சயமாக இதிலே மதவெறி தான் உச்சத்தில் அமர்ந்துள்ளதே தவிர வேறு எதுவுமில்லை.

20 ஆயிரம் கோடி வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்து எந்நேரமும் பெண்களுடன் உல்லாசம் கொழிக்கும் விஜய் மல்லையா சென்னை விமான நிலையம் வந்தால் அவரது ஆடையை அவிழ்த்து சோதனையிட சுங்கத்துறையினருக்கு திராணி இருக்கிறதா ? 

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் சென்னை விமான நிலையம் வந்தால் அவரது ஆடையை அவிழ்த்து சோதனையிட சுங்கத்துறையினருக்கு திராணி இருக்கிறதா ? 

இமயமலைக்கு சென்று விட்டு ரஜினி காந்த் சென்னை விமான நிலையத்திற்கு வரும் போது அவரது முழு ஆடையையும் அவிழ்த்து பார்க்க சுங்கத்துறையினருக்கு திராணி இருக்கிறதா ?

ஆனால் முஸ்லிம்களை மட்டும் பல விதமான சோதனை நடத்தியும், ஆடையின்றி சோதனை நடத்தியும் இரண்டு மணிநேரம், மூன்று மணி நேரம் சோதனை என்ற பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாக்கி மதவெறியை கொட்டும் சுங்கத்துறையினர் மீது அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, நசுக்கப்பட்ட சமுதாயத்தின் உணர்வுகளோடும், மான மரியாதையோடும் விளையாடுவது சரியல்ல....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக