Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 18 அக்டோபர், 2014

வீணாகும் வக்பு வாரிய சொத்துகள்: மதிப்பீட்டுக் குழு அறிக்கையில் தகவல்!

நாடு முழுவதும் வக்பு வாரிய சொத்துகள் வீணாகப் போய் கொண்டிருப்பதாகவும், அதை முறையாகப் பயன்படுத்தினால் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் கிடைக்கும் எனவும் இது குறித்து ஆய்வு செய்த மதிப்பீட்டுக் குழு சமீபத்தில் மத்திய அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி சச்சார் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, முஸ்லிம்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தி அளித்த பரிந்துரை யில், நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை மதிப்பீடு செய்ய வேண்டும் எனக் குறிப் பிட்டிருந்தது.
இதற்காக, டெல்லி ஜவாஹர் லால் நேரு பல்கலைக்கழக பேரா சிரியர் அமிதாப் குண்டு தலைமை யில் இதுதொடர்பாக குழு அமைக் கப்பட்டது. இந்த மதிப்பீட்டுக் குழு, தனது அறிக்கையை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்ச ரான நஜ்மா ஹெப்துல்லாவிடம் சமர்ப்பித்துள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் சிறுபான்மை நலத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்ச கத்திடம் உள்ள ஆவணங்களின்படி, மத்திய அரசு மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள், 1,053 தனியார்களால் 18,388 சொத்துகள் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஒரு வருடத் தில் சுமார் ஏழு சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துக்களில் பெரும்பா லானவை மீது நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இவை களை விரைந்து முடிப்பதுடன், அந்த சொத்துகளை முறையாகப் பயன்படுத்தினால் வக்பு வாரியத் துக்கு கோடிக்கணக்கான வரு மானம் கிடைக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுமார் இரண்டு லட்சம் எண்ணிக்கையில் சொத்துகள் இருந்த போதும் சுமார் 160 சொத்துகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அறிக்கை வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக