Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 14 மார்ச், 2014

ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் பறிமுதல்

திருமாந்துறை சுங்கச் சாவடி பகுதியில் நேற்று உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
வாகன சோதனை

இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதி முறைகள் பெரம்பலூர் மாவட்டத்தில் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி நடத்தை விதி முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பறக்கும் படையினர் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ரூ.1 லட்சத்து 46ஆயிரம் பறிமுதல்

அந்த வகையில் நேற்று பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான பறக்கும் படை தாசில்தார் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் சோதனையில் ஈடு பட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தொழுதூரில் இரும்புகடை வியாபாரம் செய்து வரும் சையது முஸ்தபா மகன் அபிபுல்லா உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்தை கொண்டு சென் றது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

நன்றி தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக