Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 5 மார்ச், 2014

ஏப்ரல் 7.ல் மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி வாக்குப்பதிவு!

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறும் என டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவித்தார்.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

9 கட்ட தேர்தல்:
ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பின்னர் ஏப்ரல் 9, 10, 12, 17, 24, 30 ஆகிய தேதிகளிலும். மே மாதத்தில் 7 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மே 12.ல் கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 2 மாநிலங்களில் 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் 5 மாநிலங்களில் 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் 14 மாநிலங்களில் 92 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஏப்ரல் 12- ஆம் தேதி நடைபெறும் நான்காம் கட்ட தேர்தலில் மொத்தம் 3 மாநிலங்களில் 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்ட தேர்தலில் யூனியன் பிரதேசங்களிலும் 13 மாநிலங்களில் உள்ள 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் ஆறாம் கட்ட தேர்தலில் தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறும் ஏழாம் கட்ட தேர்தலில் 9 மாநிலங்களில் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மே 7-ஆம் தேதி நடைபெறும் எட்டாவது கட்ட தேர்தலில் 7 மாநிலங்களில் 64 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மே 12-ஆம் தேதி நடைபெறும் 9-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் 3 மாநிலங்களில் 41 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 24 வாக்குப்பதிவு:

9 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி 6-வது கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சிறப்பு முகாம்:

முன்னதாக, வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 9-ஆம் தேதி நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும், அன்று புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் வி.எஸ். சம்பத் தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கை:

மக்களவைத் தேர்தலில் 543 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் மே 16-ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் அறிவித்தார்.

வாக்கு உரிமையை பயன்படுத்தவும்:

தேர்தல் தேதிகளை அறிவிக்கும் முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத், தேர்தலில் வாக்கு அளிக்கும் தகுதி உடைய இந்திய மக்கள் அனைவரும் பங்கேற்று தங்கள் வாக்கு உரிமையை பயன்படுத்த வேண்டும் என்றார்.

வாக்காளர்கள் தேர்தலில் நியாயமான, ஜனநாயக நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் உச்ச பட்ச நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தேர்தல் ஆணைய அறிவிப்புகள்:

*வரும் மக்களவை தேர்தலில், நாடு முழுவதும் 9 லட்சத்து 30,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் இது கடந்த ஆண்டை விட 12% அதிகமாகும்.

*வாக்குச்சாவடிகளுக்கு அருகில் குடிதண்ணீர், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள பாதை போன்ற அடிப்படை வசதிகள் அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

*தேர்தலில், வேட்பாளர்களை நிராகரிக்கும் ‘நோட்டா’ வசதி வரும் மக்களவைத் தேர்தலில் அமல் படுத்தப்படும்.

*தேர்தலில் குளறுபடிகளை தவிர்க்க புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு முதல் முறையாக வழங்கப்படும்.

*வாக்காளர்கள் எண்ணிக்கை கடந்த 1952.ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலின் போது 176 மில்லியனாக இருந்ததது. அது தற்போது 16-வது மக்களவைத் தேர்தலில் 814 மில்லியனாக உயர்ந்துள்ளது.

3 மாநிலத் தேர்தல்:

மக்களவைத் தேர்தல் நடைபெறும் போதே, சிக்கிம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறும் என சம்பத் அறிவித்தார்.


நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக