Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 14 மார்ச், 2014

சத்தியம் வென்றது ! அசத்தியம் அழிந்தது!

சத்தியம் வென்றது ! அசத்தியம் அழிந்தது!

திருச்சியில் ஒரு இஸ்லாமிய பள்ளியில் பயிலும் மாணவி +2 தேர்வு எழுத வேறொரு பள்ளிக்கு சென்றுள்ளார். அந்த பள்ளியில் தேர்வு நடத்தும் ஆசிரியர் அந்த மாணவியை புர்காவுடன் தேர்வு எழுத தடை விதித்தனர்.

அந்த மனைவியோ புர்காவை கழற்ற மாட்டேன் என்று விவாதம் செய்துள்ளார்.இதனை யடுத்து அந்த மாணவி பயிலும் பள்ளியின் தாளாளர் தலையிட்டு Human Guidance and Welfare Center, Chennai கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

இறைவனின் கிருபையால் தேர்வு எழுதுவதற்க்காக இஸ்லாமிய அடையாளமான புர்காவை கழற்ற தேவையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதில் நமக்கு சில படிப்பினைகள் உள்ளது.அந்த மாணவி எதிர்பேச்சு பேசாமல் அமைதியாக இருந்திருந்தால் ஆசியர்களுக்கு இஸ்லாமிய துவேசத்துடன் அடக்கு முறையை அதிகரிக்க வாய்ப்புள்ளது.நபி வழிப்படி தீமையை கையாலோ ,வாயாலோ எதிர்த்தால் தூய இஸ்லாத்தை நம்மால் பின்பற்ற முடியும் .

ஆசிரியர்களுக்கு பயந்து புர்கா அணியாமல் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பும் பெற்றோர்கள் இனி ஹிஜாப்பை அணிந்து பயமின்றி அனுப்பலாம்.


நன்றி விகளத்தூர்.காம்

3 கருத்துகள்:

  1. First paragraph 3 linil Maanavi yendru yeluthuvatharku pathilaga (Manaivi - Pondatti) yendru yeluthi ulleergal. Oru siriya yeluthu pilai thaan but evvalavu periya artha maatram ullathu yenbathai paareer. Pilaigalai muluvathum oru thadavaiku irandu thadavai padithu paarthu vittu sari seithu veli idavum. With Salaam

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்து பிழையை சுட்டி காட்டியமைக்கு நன்றி.
      எழுத்து பிழை சரிசெய்ய பட்டது.

      நீக்கு
  2. still second paragraph 1st line spelling need to be changed. to (manaivi - manavi)


    பதிலளிநீக்கு