Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 25 மார்ச், 2014

வெள்ளிக்கிழமை நமதூர் கடைவீதி

வெள்ளிக்கிழமை நமதூர் கடைவீதி

வெள்ளிக்கிழமை வந்துவிட்டாலே நமதூரில் ஒவ்வெறு வீட்டிலும் அசவை உணவு இல்லாமல் இருப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் அன்று கடைவீதிகளுக்கு வந்தாலே கூட்டம் கடைகளில் நெரிவதை பார்க்க முடியும்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஆண்கள் இல்லாத வீடுகளில் உள்ளவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள சிறுவர்களிடம் பணத்தை கொடுத்து பொருளை வாங்கிவர சொல்லுவார்கள். அந்த சிறுவர்களும் பணத்தை வாங்கிக்கொண்டு கடைகளில் கரியோ அல்லது மீனோ வாங்கும் போது சிறுவர்கள்தானே என்று நினைத்து ஒரு சிலர் தரத்தில் குளருபடி செய்தும் வருகின்றனர்.
இதனால் நமது ஊரில் உள்ளவர்கள் அப்படிப்பட்ட சிறுவர் சிறுமியர்கள் கடைக்கு வந்தால் அவர்களுக்கு தரமானதாக வினியோகம் செய்யும் படி கடைக்காரர்களை வேண்டுகோள் இடுங்கள். உடன் நீங்கள் இருந்து வாங்கிக்கொடுங்கள். ஏனென்றால் அவர்கள்தான் நாளைய வாரிசுகள் நம்மிடத்தில் இருந்து அவர்கள் அன்பையும் நேர்மையையும் பார்த்து பழகுவர். இதன் மூலம் அவர்கள் வருங்காலத்தில் தம் உரிமைகளை தட்டிக்கேட்க வீரமும் உருவாகும்.
சுற்றுவட்டார ஊர்களில் விற்பனைகள் காட்டிளும் நமதூரில் அதிக விளைக்கு ஒவ்வெறு பொருளும் விற்க, ஆடம்பரத்தையும் அத்தியாவிச தேவைகளையும் நாம் பிறித்து ஆராயாமல் இருப்பதே காரணமாகும்.
நமது நிருபர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக