Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 17 மார்ச், 2014

நமதூரின் எதிர்காலம் இனி யார்கையில்...

நமதூரின் எதிர்காலம் இனி யார்கையில்...

குன்னம்,: குன்னம் அருகே வருவாய்த் துறைக்கு சொந்தமான இடத்தில் மண்டபம் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் இருதரப்பைச் சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு கிராமத்தில் மேற்கு ஜமாத் பள்ளி வாசல் அருகே வருவாய்த் துறையினருக்கு சொந்தமான 10 சென்ட் இடத்தை அதே ஊரைச் சேர்ந்த அப்துல்சலீம் என்பவர் கடந்த 1997ம் ஆண்டு அனுபவ பாத்தியத்தில் பட்டா பெற்றார். 






பொது இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து பட்டா மாற்றம் செய்து உரிமை கொண்டாடினால் செல்லாது என்பதால் அந்த இடத்தை  மேற்கு ஜமாத்திற்கு தான செட்டில்மென்ட் முறையில் கடந்த 2008ம் ஆண்டு எழுதி கொடுத்தார்.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட இடத்தில் மேற்கு ஜமாத் பொதுமக்கள் சார்பில் உணவு விருந்து மண்டபம் கட்டுவதற்காக முதற்கட்ட பணி நடந்தது.
இதனையறிந்த கிழக்கு ஜமாத் பொதுமக்கள் ஊருக்கு பொதுவான குளம் உள்ள இடத்தையொட்டி உள்ள சம்மந்தப்பட்ட இடத்தை நீங்கள் மட்டும் உரிமை கொண்டாடும் விதமாக உணவு விருந்து அளித்திடும் மண்டபம் கட்ட கூடாது. பொது இடத்திற்கு வழங்கிய பட்டாவை வருவாய்த்துறையினர் ரத்து செய்ய வேண்டும் என தடுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 
இது தொடர்பாக பெண்ணக்கோனம்(வடக்கு) விஏஓ மனோகரன் அளித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் லப்பைக்குடிகாடு மேற்கு ஜமாத் பகுதியை சேர்ந்த சுல்தான்மொய்தீன்குலாம்காதர்ஷாஜீப்தீன்முகமதுபாரூக்சம்சுதீன்மீரா மொய்தீன்அன்வர்பாஷா  ஆகியோர் உட்பட 10 பேர் மீதும்கிழக்கு ஜமாத் பகுதியை சேர்ந்த  முகமது இஸ்மாயில்ஜாபர்உசேன்சம்சுதீன்ஹாதிசைவுகர்அலிஅகமதுஉசேன் ஆகியோர்  உட்பட  10 பேர் மீதும் என மொத்தம் 20 மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட சப் கலெக்டர் மதுசூதனரெட்டி விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இந்த பிரச்னை தொடர்பாக இருதரப்பினரும் அடிக்கடி மோதிக் கொள்வதோடு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இனி வரும் காலங்களில் எந்தவிதமான கட்டுமான பணிகளும் மேற்கொள்ள கூடாது. தற்போதுள்ள நிலை மறு உத்தரவு வரும் வரை நீடிக்க வேண்டும் என்பதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இச்சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி தினகரன்

14 கருத்துகள்:

  1. labbaikudikadu nirubar avargala ithu sammanthamana seithigalai udanadiyaka namathu thalathil podavum

    பதிலளிநீக்கு
  2. நான் கிழக்கே நீ மேற்கே என்று பாக பிரிவினைவாதைத்தை எப்போது நாம் கை விடுகிறோமோ அப்போது தான் நமக்குள் மனம் சேர்ந்த ஒற்றுமை வரும். இந்த பிரச்சனைகளுக்கு மூல காரணம் எதையும் திட்ட மிடாத நமது ஜாமத் தலைவர்கள் தான். ஜமாலி நகரை பிரிக்கும் போதே இந்த மண்டபத்திற்கு நிலம் ஒதுகப்பட்டிருந்தால் இப்போது இந்த பிரச்னை இருந்திருக்காது. ஜமாலி நகரில் பள்ளிவாசல் கட்ட நிலம் ஒதுக்க வில்லை, மருத்துவமனை, பேருந்து நிலையம் அமைக்க, விளையாட்டு திடல் இது போன்ற மேலும்பல நல்ல காரியங்களுக்கு போதுமான இடவசதியை ஏற்படுத்தவில்லை. தற்போது இருக்கும் பேருந்து நிலையத்தின் அருகில் பல கடைகளை கட்டினார்கள் ஆனால் அங்கு தொழுவதற்கு ஒரு இடத்தை ஒதுக்க முன்வர வில்லை. பொது நலனில் நாம் அதிக அக்கறை செலுத்தும் போது இதுபோன்ற சண்டைகள் நமக்குள் வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முஸ்தபா அவர்களே! ஒற்றுமையைபற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை ஏனென்றாள் தாங்களும் தவ்ஹீத் கிழக்கு மேற்க்கு என்றுவைத்துள்ளீர்.

      நீக்கு
  3. கொள்ளையர்களின் அராஜகம் :

    இது மேற்கு ஜமாத்தின் , அதி பயங்கர அறிவாளிதனத்தை ( பொது மக்களின் , பொது சொத்தை சூறை ஆடுவதில் , வல்லவன் , சூரன் என்பதை ) சுட்டிக்காட்டுகிறது !

    கிழக்கு ஜாமாத் : நானும் அதற்க்கு சளைத்தவனில்லை ! நாங்கள் ஏமாளிகள் இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது !

    உண்மையில் ஏமாளிகள் பொது மக்களாகிய நாங்களே !!!!

    இப்படிதான் ஒவ்வொரு நல்லக்கரியமும் - குரங்கு பங்கீட்டுக்கதையாக ஆகிவிடுகிறது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேற்கு ஜமாத்தில் திருமண விருந்து வைக்க பள்ளிவாசலில் போதிய இடவசதி இல்லை அதன் காரணமாகவே இந்த இடத்தில் புதிதாக ஒரு மண்டபத்தை கட்டுகிறார்கள். மேற்கு ஜமாத்தினர் சொத்தை சூறை ஆட நினைகிறார்கள் கொள்ளையர்களின் அராஜகம் என்று சொல்வது மிகவும் தவறு. இது தனிநபருக்காக அல்ல, அவர்களின் பொது தேவைக்கு இந்த பொறம்போக்கு நிலத்தை பயன் படுத்த நினைகிறார்கள். இந்த இடம் மேற்கு பள்ளிக்கு கொஞ்சம் அருகில் இருப்பதால் அவர்களுக்கு இந்த இடம் வசதியாக இருக்கும். மேற்கு ஜமாத்தின் வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு கிழக்கு ஜமாஅத் விட்டுதந்திருக்கவேண்டும். பிரச்சனைகளை இரு ஜமாத்தும் பேசி சரியான முடிவு காண வேண்டும். அதை விட்டு அடுத்தவர்கள் மீது வழக்கு போடுவது மிகவும் தவறு. இரு ஜமாத்தும் சமாதானத்துடன் போயிருந்தால் கண்டிப்பாக வருவாய் துறை தலையிட்டிருக்காது.

      நீக்கு
  4. நீங்கள் சொன்ன வாறு நாங்கள் ஒன்றும் மேற்கு கிழக்கு என்று பிரித்து பார்பது இல்லை. நாங்கள் ஒரே ஜமாத்தாக தான் செயல் படுகிறோம் எங்களின் எல்லா பணிகளும் ஊரின் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தி வருகிறோம். சில வசதிகளுக்காக கிழக்கு பகுதி மக்கள் தொழுவதற்கு கிழக்கே ஒரு பள்ளியும் மேற்கு பகுதி மக்கள் தொழுவதற்கு மேற்கே ஒரு பள்ளியும் அமைத்துள்ளோம். அப்படி நீங்கள் சொல்வது போல் இதே சிந்தனை தவ்ஹித் ஜமாஅத் சகோதரர்களிடம் இருந்தால் அவர்கள் அல்லாவிற்கு பயந்து தங்களை மாற்றி கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. ஜ்ஜஅமளி நகரில் மேற்கு ஜமாஅத்கார் களுக்கு மற்றும் கிழக்கு ஜமாஅத்கார் தலைவர் களுக்கு அதிக எடம் இருக்கின்றது அதனை பங்கு போட்டால் இந்த பிரசெனிக்கு முடிவு கிடைக்கும். இஸ்மாயில் வாத்தியார் மற்றும் மேற்க்க பஷீர் டிவிஎஸ் ஆகியோருக்கு எதனை எடம் என்று பார்க்கவும்

    பதிலளிநீக்கு
  6. ஜமாலியா நகரின் உன்மையான தொண்டன்.19 மார்ச், 2014 அன்று PM 7:18

    பையரில்லா பொறம்போக்கு.



    இஸ்மாயில் வாத்தியார் மற்றும் பஷீர் இவர்களிடம் உள்ள மனைகள் எத்தனை முறை வெளிவந்தது.நீ எங்க புடுங்க போன...இப்ப வந்து கேக்குற..இந்த உலகத்துக்கு இப்ப தான் வந்துயா...................

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கு பேரு தான் அங்க அடிச்சா எங்க வலிக்குதா இஸ்மாயில் வாத்தியாரை பத்தி பேசின உனக்கு ஏன்டா வலிக்குது. ஜமாலியா நகரின் உன்மையான தொண்டன் நீ தண்ட உண்மையான பொறம்போக்கு.

      நீக்கு
    2. ஜமாலியா நகரின் உன்மையான தொண்டன் நீ எங்க புடுங்க போன...இப்ப வந்து கேக்குற-
      தம்பி நீங்க புடுங்குனத காமிங்க பார்போம்

      நீக்கு
  7. ismayil vathiyara sona unaku enda kovam varuthu punnaku...............

    பதிலளிநீக்கு
  8. இது மேற்கு ஜமாத்தின் , அதி பயங்கர அறிவாளிதனத்தை ( பொது மக்களின் , பொது சொத்தை சூறை ஆடுவதில் , வல்லவன் , சூரன் என்பதை ) சுட்டிக்காட்டுகிறது !

    பதிலளிநீக்கு