வியாழன், 6 மார்ச், 2014
புதன், 5 மார்ச், 2014
அபுபக்கர் (ரலி) தெருவில் இருந்து நாம்.....
பொதுவாக ஒரு
சம்பவத்தையே அல்லது மக்களுக்கு ஏற்படும் ஓர் இடையுரையே நேரில் பார்த்த ஒருவர்
நடந்த சம்பவங்களை அச்சத்துடனும் திகிலுடனும் நம்முடன் பகிர்ந்து கொள்ளும்
சந்தர்ப்பங்களில் நாமும் அதே உணர்வுகளுடன் நடந்த சம்பத்தை கேட்பதுடன்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு
நீதி நிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு கொதி நிலைக்கு தள்ளப்படுவோம். இது தான்
சாதாரண மனிதனின் இயல்பு. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை தான் நாம் கடந்த நாட்களில்
நமதூர் பேரூராட்சியின் பணிகளின் மக்கள் கருத்து !? என்ற தலைப்பில் நமது தளத்தில்
வெளியிட்டு அந்த பகுதி மக்கள் படும் துன்பத்தை சுட்டிகாட்டியிருந்தோம்.
செவ்வாய், 4 மார்ச், 2014
வி.களத்தூர் அருகே இந்து முன்னணி தீவிரவாதிகளின் வேலை பாரீர்!!
பெரம்பலூர் மாவட்டம்-வி.களத்தூர் அருகில் உள்ள இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் வடகரை என்ற ஒரு சிறிய கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு(2-2-14) இந்து முன்னணி தீவிரவாதிகள் பாலன் மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு தீவிரவாதி இருவரும் சேர்த்து கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை இஸ்லாமியர்கள் தான் வெடி வெடித்து கொண்டாடுகின்றனர் என்று மக்களை திசை திருப்புவதற்காக காட்டு பகுதிகளில் யாருக்கும் தெரியாமல் வான வேடிக்கைகளை நடத்தி உள்ளனர்.
திங்கள், 3 மார்ச், 2014
கல்வி தீபம் ஏற்றிய மௌலானா முஹம்மது பின் அலவி (ரஹ்)
கல்வி தீபம் ஏற்றிய மௌலானா முஹம்மது பின் அலவி (ரஹ்)
(பெரம்பலூர் மௌலான அவர்களை பற்றிய கட்டுரை)
பிறப்பு:
தோன்றின் புகழோடு தோன்றுக என்பர். நம் மௌலானா அவர்கள் அதற்கு இலக்கணமாகத் தோன்றினார்கள். இந்தியத் திருநாட்டின் தென்மேற்கு மாநிலமான கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டம் மன்னார்காடு தாலுக்கா வெட்டத்தூர் என்ற அழகிய மலைகள் சூழ் கிராமத்தில் 1896-ஆம் ஆண்டு மிக ஏழ்மையான குடும்பத்தில் அலவி, பாத்திமா பீவி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். முஹம்மது குடும்பத்தின் முதல் குழந்தையான இவருக்கு ஜெய்னுலாப்தீன் என்ற தம்பியும் உம்மாத்தம்மாள் என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவர். இவர்களின் குடும்பத்தை 'காராடன் குடும்பம்' என்று அப்பகுதி மக்கள் அழைத்து வந்தனர்.
ஞாயிறு, 2 மார்ச், 2014
வெள்ளி, 28 பிப்ரவரி, 2014
‘கோலா’க்களினால் ஏற்படும் கோளாறுகள்!
மனிதனைப் படைத்தான் இறைவன். அவன் வாழ்வதற்கான அனைத்து வசதிகளையும் செய்து தந்தான். பூமியிலிருந்து தானியங்களை விளையச் செய்தான். வானிலிருந்து மழையைப் பொழியச் செய்தான். சுவாசிக்க சுத்தமான காற்றை வீசச் செய்தான்.
மனிதன் துவக்கத்தில் இயற்கை உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தான். பழங்களும், காய்கறிகளும் மனிதனுக்கு உண்ண படைக்கப்பட்ட சில கால்நடைகளும் அவனுக்கு வேண்டிய சத்துகளை அளித்தன.
வியாழன், 27 பிப்ரவரி, 2014
புதன், 26 பிப்ரவரி, 2014
திருமாந்துறை சுங்கச்சாவடி தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்!
லெப்பைகுடிகாடு அருகே திருமாந்துறை சுங்கச் சாவடியில் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் திடீர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால் 4 சக்கர வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுங்கச்சாவடி
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிகாடு அருகே உள்ள திருமாந்துறை கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் சுங்கச்சாவடி உள்ளது.
செவ்வாய், 25 பிப்ரவரி, 2014
படித்ததில் பிடித்தது...
ஒரு இளைஞர் தன்னுடைய தாயோடு ஒரு பயணம் செய்துகொண்டிருந்தார்.அந்த பயணத்தில் தாயே நான் நம்மை படைத்த அல்லாஹ்விடம் ஒரு "துஆ" பிராத்தனை செய்யப்போகிறேன் நீங்கள் அதற்க்கு ஆமீன் என்று கூறவேண்டும் என்றார்.தாயும் சரி மகனே என்றாள்.அப்போது அந்த தாய் நீ இறைவனிடம் என்ன கேட்கப்போகிறாய் என்று நான் தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் என்றால்.தன் தாயிடம்
டிடி எனப்படும் டெட்டனஸ் இஞ்சக்ஸன்!
உடம்பில் ஒரு கீறல் விழுந்தாலும் உடனே ஓடி போய் ஏதாவது ஒரு டிடி ஊசி போடுவோம்.
இந்த ஊசி எதற்கு, இது எத்தனை வருடத்திற்கு ஒரு முறை செலுத்த வேன்டும் என்பது உங்களில் பலருக்கும் தெரியாது.
முதலில் டெட்டனஸ் ஊசி இரன்டு வகைப்படும். ஒன்று – DTaP (Diptheria and Pertussis) இன்னும் ஒரு வகை Tdap (Tetanus Boosters).
முதலில் கூறிய DTaP வகை குழந்தைகளுக்கு பிறந்த 2 மாதம் / 4 மாதம் / 6 மாதம் / 12 – 18 மாதம் / 4 – 6 வயது வரை இந்த வகை ஊசிகளை உங்கள் குழந்தைக்கு தவறாமல் போட்டால் Clostridium Tetani.also known as Lockjaw என்னும் நோய் வராது.
2010-ல் தனி நபர் வருமானம்: கடைசி நிலையில் பெரம்பலூர்!
2010-ல் தனி நபர் வருமானம்: பெரம்பலூரில் ரூ.15,510, கன்னியாகுமரியில் ரூ.62,579 -
தமிழக மாவட்டங்களின் தனி நபர் வருமானத்தை ஒப்பிட்டு பார்த்தால், மாநிலத்தில் கடைசி நிலையில் பெரம்பலூர், அதைவிட நான்கு மடங்கு அதிக வருமானத்துடன் முதல் இடத்தில் கன்னியாகுமரி. இதிலிருந்தே மாவட்டங்களிடையே எவ்வளவு பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ளது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள முடியும்.
அண்மையில் தமிழ் நாடு அரசு வெளியிட்ட ‘புள்ளியியல் தகவல் 2013’ என்ற அறிக்கையிலிருந்து இந்தத் தகவல்கள் எடுக்கப்பட்டன. மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில் 18 மாவட்டங்கள் மாநில சாராசரி தனி நபர் வருமானத்தை விட குறைவான வருமானத்தை பெற்றுள்ளன. மீதம் உள்ள 14 மாவட்டங்கள் சராசரியை விட அதிக தனி நபர் வருமானத்தை பெற்றுள்ளன. குறைந்த தனி நபர் வருமானம் உள்ள 18 மாவட்டங்களை பின் தங்கிய மாவட்டங்கள் என்றும், அதிக தனி நபர் வருமானம் உள்ள 14 மாவட்டங்களை முன்னேறிய மாவட்டங்கள் என்று பிரித்து ஆராய்வோம்.
திங்கள், 24 பிப்ரவரி, 2014
நாளை (25-02-2014) நமதூரில் மாச கறன்ட்....
குன்னம் அருகே உள்ள மங்களமேடு தானியங்கி துணை மின் நிலையத்தில் 25-02-2014(செவ்வாய்க்கிழமை) பரா மரிப்பு பணிகள் நடைபெறு கிறது. இதனால் மங்களமேடு தானியங்கி துணை நிலையத் திலிருந்து மின் வினியோகம் பெறப்படும் வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, சின்னாறு, பெருமத்தூர், குன்னம், வரகூர், பொன்ன கரம், பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், கிளியூர், வைத்தியநாதபுரம், அயன் பேரையூர்,
இறையச்சத்துக்கான இவ்வுலகப் பரிசு!
சவூதி அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த சூடான் நாட்டு ஏழையிடம், அவரின் நேர்மையை சோதிக்கும் வண்ணம், காரில் பிரயாணித்து வந்த சவூதிகள் சிலர் அவர் வைத்திருந்த ஆட்டு மந்தையில் ஒன்றை தமக்கு தரச் சொல்லி கேட்க…
ஆடு மேய்ப்பவரோ, “இது எனது ஆடில்லை. இன்னொருவரின் ஆட்டு மந்தை. நான் எப்படி இதை உங்களுக்கு தரும் அதிகாரம் பெற முடியும்?’ என்று கூறி ஆட்டை தர மறுக்க…
அவரிடம் “ஆடு தொலைந்து விட்டது” என்று உரிமையாளரிடம் பொய் கூறி விட்டு, தன்னிடம் 200 ரியாலுக்கு விற்று விட பணத்தாசை காட்டி வந்தவர்கள் கேட்க…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தீர்மானம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 15வது மாநிலப் பொதுக்குழு ஈரோட்டில் உள்ள பிளாட்டினம் மஹாலில் 23.02.14 ஞாயிற்றுக்கிழமை அன்று கூடியது. இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி அறிவிப்புத் தீர்மானங்கள் :
கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் நீண்ட காலமாக முஸ்லிம் சமுதாயம் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. மத்தியில் 10 சதவீதமும், மாநிலத்தில் 7 சதவீதமும் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளித்தால்தான் முஸ்லிம்கள் போதுமான பிரதிநிதித்துவம் பெற முடியும் என்பதைக் கவனத்தில் கொண்டு ஜனவரி 28அன்று சென்னை, திருச்சி, நெல்லை, கோவை ஆகிய நான்கு நகரங்களில் மாபெரும் சிறைநிரப்பும் போராட்டத்திற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை உரிய முறையில் மக்கள் உள்ளங்களில் பதியச் செய்து லட்சக்கணக்கான மக்களைத் திரளச் செய்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு தனது நன்றியை இப்பொதுக்குழு உரித்தாக்குகின்றது.
மனிதகுலத்திற்கெதிரான மாபாதகத் தீர்ப்பு!
டெல்லி உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு தீர்ப்பு!
அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த அந்தத் தீர்ப்பு இதுதான்: ‘‘ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் ஒப்புதலுடன் உடலுறவு வைத்துக்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகக் கருத முடியாது!’’
இந்தத் தீர்ப்பு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பின்போது நீதிபதிகள், ‘‘ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் தம் முழு விருப்பத்தின்படி உடலுறவு கொள்வதைத் தண்டனையாகக் கருதுவது ஒருபக்கச் சார்புடையது மட்டுமின்றி மனித உரிமைக்கு எதிரானதும் ஆகும்’’ என்று குறிப்பிட்டனர்.
இந்திய தண்டனைச் சட்டப்படி ஒரே பாலினத்தைச் சார்ந்த இருவர் உடலுறவு கொள்வது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றுத் தரவல்ல குற்றமாகக் கருதப்பட்டு வந்தது.
அம்மா ஹோட்டல், நமோ டீக்கடை, ராகா பால்கடை! - சில்லறை வியாபாரமாகிப் போன அரசியல்!
சமீப காலமாக இந்திய அரசியல் கட்சிகள் மூலமும், அரசுகள் மூலமும் ஆங்காங்கே சிறு சிறு கடைகள், வணிக நிறுவனங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன.
‘அம்மான்னா சும்மா இல்லேடா.. அவ இல்லாம யாரும் இல்லேடா!’ என்ற பாட்டு வரிகள் பலருக்கும் மறந்தாலும் தற்போது அஇஅதிமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசின் திட்டங்கள் ‘அம்மா’வையும், மேற்க்கண்ட பாடலையும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
சனி, 22 பிப்ரவரி, 2014
வியாழன், 20 பிப்ரவரி, 2014
சுகமும், துக்கமும்!
வாழ்க்கையை மிக மகிழ்ச்சியாகக் கழிக்கிறாள் 18 வயது நிரம்பிய அந்த இளம் பெண். நல்ல மார்க்க சூழ்நிலையில் அவளின் பெற்றோர்கள் அவளை வளர்த்தெடுத்தனர். அருமையான அண்டை அயலாருடன் அவளது வாழ்க்கை அமைதியாகக் கழிகிறது. கவலை என்றால் என்ன என்றே தெரியாத அளவுக்கு அவளை அவளின் பெற்றோர்கள் கண்ணே... பொன்னே... என்று கவனித்துக்கொண்டனர்.
அவளுக்கு 18 வயது நிரம்பிய பொழுது அவளின் பெற்றோர்கள் அவளுக்கு திருமணம் முடித்து வைக்கும் முயற்சியில் இறங்கினர். இத்தனை வருடம் தன் பெற்றோருடன் பின்னிப் பிணைந்து வாழ்ந்த அந்த இளம் பெண்ணுக்கு திருமணத்தை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
புதன், 19 பிப்ரவரி, 2014
இராமநாதபுரத்தில் நடந்தது என்ன?
முஸ்லிம்களின் இரத்தம் இந்திய நாட்டிற்கு மிக அவசிய தேவையாகி போனது. சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு, ஜனநாயக ரீதியில் முஸ்லிம்கள் வாழ்வதை இந்திய ஆளும் வர்க்கமும், ஆதிக்க வர்க்கமும், வந்தேறிகளான ஃபாஸிச ஆரிய வர்க்கமும் விரும்பவில்லை என்பது நன்றாக புலப்படுகிறது.
அடக்கி ஒடுக்கப்பட்டு, வஞ்சனைகளுக்கு உள்ளாகி, உரிமைகளையும், உடைமைகளையும், உயிர்களையும் இழந்து அகதிகள் நிலைக்கு தள்ளப்படும் ஒரு சமூகத்திற்குத்தான் அதன் வலியின் வேதனையும், வாழ்க்கையின் ரணங்களும் தெரியும். நிச்சயம் அது
செவ்வாய், 18 பிப்ரவரி, 2014
இராமநாதபுரத்தில் நடந்த சம்பவமும் சகோதர்களில் கடமைகளும்...
எதிர்பாரத விதமாக PFI யுனிட்டி மார்ச்-ல் காவல்துறை தடியடி நடத்திய இடத்தில் இருந்து 350 மீட்டர் தொலைவில் செல்லும் நிர்பந்தம் ஏற்பட்டது.
சம்பவம் நடந்த இடத்திற்கு சில நிமிடம் தாமதம்மாக சென்றதால், அதற்க்கு முன் நடந்த (ஐந்து நிமிடம்) சம்பவம் என்ன வென்று அறுதி இட்டு சொல்ல முடியவில்லை, (அறிந்தவரை காவல்துறை தடியடி நடத்தியதற்கு முக்கிய
முஹம்மது(ஸல்) பற்றி அவதூறு
முஹம்மது(ஸல்) பற்றி அவதூறு
தினமணியின் இலவச இணைப்பான சிறுவர்மணி குழந்தைகள் வார இதழில் நேற்று முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றி காவிக் கயவர்கள் எழுதி இருக்கும் அவதூறு. முஹம்மது(ஸல்) அவர்களை வெள்ளிக்கிழமை கல் எரிந்து கொன்றார்கள் என்று எழுதி உள்ளான். வரலாற்றை புரட்டுவதில் காவிகளை விட கை தேர்ந்தவர்கள் யார் இருக்க முடியும். சிறுவர்கள் உள்ளத்திலும் பொய் வரலாற்றை விதைக்கிறார்கள்.
திங்கள், 17 பிப்ரவரி, 2014
“இராமநாதபுரம் தொகுதியை SDPI அறிவித்துள்ளதால் மமக அந்தத் தொகுதியைக் கேட்காது!” – தமுமுக தலைவர் ஜே.எஸ். ரிஃபாயி
ஜித்தா: “நாங்கள் இராமநாதபுரம் தொகுதியைக் கேட்கவில்லை. எங்கள் முதல் கோரிக்கையில் இருப்பது மயிலாடுதுறை மற்றும் மத்திய சென்னைதான்” என்று தமுமுகவின் மாநிலத் தலைவர் மவ்லவி J.S. ரிஃபாயி ரஷாதி கூறியுள்ளார்.
தற்போது சவூதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், கடந்த 14.2.2014 வெள்ளி மாலை ஜித்தா நகரில் ஸரபிய்யா இம்பாலா ஆடிட்டோரியத்தில் “இன்றைய அரசியலில் மனித நேய மக்கள் கட்சி” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014
இவரை தெரிகிறதா ....?
இவரை தெரிகிறதா ....?
தலைநகர் டெல்லியின் ரோட்டு ஓரங்களில் செருப்பு தைக்கும் தொழிலாளியான இவர்தான் டெல்லியை ஆண்ட டெல்லி பாதுஷா என்று அழைக்கப்படும் பகதூர் ஷா ஆலம் [FAHATH AR SHA AALAM.]அவர்களின் வாரிசு தான் இவர் இன்றைக்கு அரசியல் வாதிகள் கும்மாளம் போடும் பாராளுமன்றத்தை கட்டியதும்..டெல்லி செங்கோட்டை .
இன்னும் பல பேரு சொல்லும் கட்டிடங்க்களை கட்டியதும் இந்த பகதூர் ஷா ஆலம்தான் டெல்லி குத்மினாரை இவரது சகோதரர் குத்புதீன் கட்டினார் மொகலாய மன்னர்களை பற்றி சொல்லவேண்டும் என்றால் அவர்கள் கொண்டுவந்த நல்ல சட்டங்கள்
சனி, 15 பிப்ரவரி, 2014
மனித உரிமைக்கு எதிரான சட்டங்களை வாபஸ் பெறவேண்டும் – மும்பையில் யு.ஏ.பி.ஏவுக்கு எதிரான மக்கள் இயக்கம்!
தடா, பொடா போல மத்திய அரசு தற்போது அமல்படுத்தியிருக்கும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யு.ஏ.பி.ஏ) அரசியல் சாசனம் அளிக்கும் மனித உரிமைகளை அழிக்கும் சட்டம் என்றும், இதற்கு எதிராக மக்களின் கோபம் எழவேண்டும் என்றும் யு.ஏ.பி.ஏவுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர்கள் மும்பையில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். யு.ஏ.பி.ஏவுக்கு எதிராக தேசிய அளவில் நடத்தப்படும் பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக மும்பை ப்ரஸ் க்ளப்பில் யு.ஏ.பி.ஏவுக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு
வியாழன், 13 பிப்ரவரி, 2014
நம்முடைய சிந்தனை மறைந்து விட வில்லை உறைந்து விட்டது
அன்வரும் தாஹிரும் கல்லூரி முடித்துவிட்டு கல்லூரி விடுதிக்கு சென்றனர்.
அன்வர். தாஹிர் இன்னைக்கு இப்ராஹிம் சார் பாடம் என்னடா நடத்தினார்?
தாஹிர். அதவிடு ரெண்டாவது பிரியடுக்கடுத்து நீ எங்க போகிர்ந்த?
அன்வர்.. மலைக்கோட்டைக்கு கிப்ட் வாங்க போகிர்ந்தேன் ?
புதன், 12 பிப்ரவரி, 2014
யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்திற்கு வந்தால் யாருக்கு லாபம்?
ஒரு தீவிர ஹிந்து பக்தரான இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டில் இஸ்லாம் புகுந்துள்ளது.
அவருடைய இளைய மகனும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை ஏற்றுள்ளார். யாரும் எதிர்பார்க்காத ஒன்று இது. இதுதான் இஸ்லாத்தின் சக்தி என்பது. அது யாரை வேண்டுமானாலும் ஊடுருவும். நாளை இளயராஜாவே இஸ்லாத்தில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
திங்கள், 10 பிப்ரவரி, 2014
ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014
பிரார்த்தனை யாருக்கு? எதற்கு?
அன்றி, “எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மையளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ காப்பாயாக!” எனக் கோருவோரும் அவர்களிலுண்டு. தங்கள் (நல்) வினையின் (பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்குத்தான் உண்டு, தவிர, அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் மிகத் தீவிரமானவன். (அல்குர்ஆன் 2:201-202)
“பிரார்த்தனை என்பது வணக்கத்தின் சாரம் ஆகும்.” (ஹதீஸ்)
சனி, 8 பிப்ரவரி, 2014
பேறு காலம் முடிந்த பெண்களே… இதச் சாப்பிடுங்க! பிரசவத்திற்கு பிறகு பெண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!
பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு ஒருசில உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டியிருக்கும். அதே போல் குழந்தை பிறந்த பிறகு ஒரு சில உணவுகளின் மீது ஆசை அதிகம் எழும்.
அதிலும் அத்தகைய உணவுப் பொருட்கள் அனைத்தும் கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடக் கூடாதவையாக இருக்கும். ஏனெனில் அவற்றில் கலோரிகள் அதிகப்படியாக இருப்பதால், அவற்றை தவிர்க்க வேண்டுமென்று சொல்வார்கள்.
ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை பிரசவத்திற்குப் பின் பெண்கள் எந்த ஒரு பயமின்றியும் சாப்பிடலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
வெள்ளி, 7 பிப்ரவரி, 2014
தோல்வி பயத்தில் காவி டவுசர் பாய்ஸ் கலக்கம் popular front நெல்லை மாவட்ட தலைவருக்கு போனில் கொலை மிரட்டல்
தோல்வி பயத்தில் காவி டவுசர் பாய்ஸ் கலக்கம் popular front நெல்லை மாவட்ட தலைவருக்கு போனில் கொலை மிரட்டல்
(மிரட்டல் விட்ட காவி டவுசரை கைது செய்ய போலிஸ் கமிஷ்னரிடம் புகார்)
எப்பா நீ பயம் காட்டுவதற்கு பயப்படும் கோழைகள் நாங்கள் இல்லை
கோழைகளே உங்களுடைய மிரட்டலுக்கு நாங்கள் பயப்படபோவதும் இல்லை ஓடி ஒழியபோவதும் இல்லை.
வியாழன், 6 பிப்ரவரி, 2014
புதன், 5 பிப்ரவரி, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)