Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 23 ஜனவரி, 2013

மீண்டும் அனிதியிலக்க படும் வி.களத்தூர் முஸ்லிம்கள்...


வி.களத்தூரில் நேற்று இரவு (22-01-2013) திடிர் பதட்டம் நிலவியது . இஸ்லாமியர்கள் வாழும் தெருவில்( பிரச்சனைச் செய்யும் நோக்கத்துடன் ) மேலதாளத்துடம் திருமணம் விழா என்ற பெயரில் தெருவுகளில் உள்ளே ஊர்வளம் வந்தனர், இதை அறிந்த இஸ்லாமியர்கள் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை பள்ளிவாசல் வழியாக எந்த வித ஊர்வளம் நடத்தமாட்டோம் என்று கூறிவிட்டு  திருமணம் விழா என்ற பெயரில் தெருவுகளில் ஊர்வளம் வந்ததை கண்டித்தனர் நியாயம் கேட்டனர்.

அப்போது பேசுக்கொண்டு இருக்கும் போது மாடியில் இருந்து கல்லை எறிந்து உள்ளனர் ( இவர்கள் திட்டமிட்டு ஊர்வளம் நடத்தி மத மோதலை உருவாக்க மாடியில் கல்லை பதிக்கி வைத்துள்ளன என தகவல் வருகிறது), இதில் இஸ்லாமிய சகோதர்கள் சிலர் காயம் அடைந்துள்ளனர் மற்றும் சில இஸ்லாமிய சகோதரரை அடித்துள்ளனர்.
காயம் அடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பஜிர் தொழுகையைக்கும், கல்லூரிக்கு சென்றவர்கள் கைது ?
இதை அடுத்து இன்று அதிகாலை பஜிர்  தொழுகைக்கு சென்றவரை கைது செய்துள்ளதாக தெரிகிறது இஸ்லாமியர்கள்  மீது நாங்கள் FIR போடவேண்டும் ஆகையால் கைது செய்துள்ளேம் என போலீஸ் கூறியதாக தெரிகிறது.
கல்லூரிக்கு சென்றவர்கள் கைது செய்ததாக ஒரு தகவல் பரவுகிறது ?
நன்றி வி.களத்தூர்.காம்

1 கருத்து:

  1. வி.களத்தூரில் நேற்று இரவில் இருந்து நடந்துவரும் காவி பயங்கரவாதிகளின் ஆராஜகத்தையும், காவல்துறையின் காவி ஆதரவு போக்கையும் நாங்கள் தொடர்சியாக கவனித்து வருகிறோம், நேற்றும் இன்றும் நடந்துவரும் சம்பவங்கள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் காவல்துறைகண்கானிப்பாளரை தொடர்புகொண்டும் பேசி வருகிறோம் கைது செய்யப்படும் இசுலாமிய இளைஞர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை செய்ய நாங்கள் தயார்நிலையில் இருக்கிறோம்.
    அநீதிக்கு எதிராய்..
    அடக்குமுறைகளுக்கு எதிரியாய்....
    இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம். தமிழ்நாடு. தொடர்புக்கு. 94881 59091

    பதிலளிநீக்கு