Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 2 ஜனவரி, 2013

த.த.ஜ சகோதரர்களே சிறை நிரப்ப நாங்கள் தயார் நீங்கள் தயாரா?


உங்கள் இயக்கத்தை சேர்ந்த மூவர் சிறைப்பட்டதும் முற்றுகை சிறை நிரப்பும் போராட்டம் நடத்தும் நீங்கள் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் கோரிக்கையான பல்லாண்டு காலம் வாடும் சிறைவாசிகளின் கோரிக்கைக்கு  இது வரை துரும்பைக் கூட அசைக்காத்து ஏன்

உங்கள் இயக்கதினர் மீது காவல் துறை தடியடி நடத்தியதும் ஒட்டு மொத்த சமுதாயமும் அணி திரள வேண்டும் எனும் நீங்கள் 'ஒரு பொதுப் பிரச்சனையில் இவர்கள்
ஒன்றுபட்டு போராடிக் காட்டட்டும்' என்ற சவாலை முறியடித்து   ஒட்டு மொத்த சமுதாயமும் அணி திரண்ட நபிகளாரை இழிவு படுத்திய  அமெரிக்க தூதரக் முற்றுகையின் போது நடந்த தடியடியின் போது குரல் கொடுக்காமல் எங்கள் போராட்டத்தில் இது போல் நடக்குமா?   எள்ளி நகையாடியது ஏன்?

அண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றவுடன் அனைவரும் அவருக்காக குரல் கொடுத்த போது அபுதாகிர் எனும் மரணத்தோடு போராடும் சிறைவாசிக்காக  மனிதாபிமானத்தோடு ஒரு அறிக்கை கூட த.த.ஜ கொடுக்காதது ஏன்?

ப.சிதம்பரம் வீட்டு முற்றுகையில் கைதான ஐ.என்.டி.ஜே.வினரை விடுதலை செய்யக் கோரி அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் அந்த மண்டபத்தை முற்றுகை இட்ட போது , அதை கேலி பேசிய உங்களின் செயலை மறந்து உங்கள் மீது தடியடி என்றதும் திருவல்லிக்கேணிக்கு  ஓடி வந்த ஐ.என்.டி.ஜே. வினரை     
இழிவு படுத்தி அனுப்பியது ஏன் ?

உங்களுக்காக வந்த மற்ற இயக்கத்தினரை 'இவர்களின் 23 அமைப்பு நடத்திய வன்முறையால் தான் நமக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது' என கூறி விட்டு இப்போது அனைவரையும் அழைப்பது ஏன்?

அதெல்லாம் போகட்டும்! இனி வரும் காலங்களில் இது போன்று சமுதாயப் பிரச்சனைகளில் நாங்களும் கலந்து கொள்வோம் என அறிவியுங்கள் ! ஒட்டு மொத்த சமுதாயமும் உங்களோடு சிறைகளை நிரப்புவோம்!  நாங்கள் தயார் நீங்கள் தயாரா?  

மின்னஞ்சல் மூலமாக 
இவண் -சமுதாயக் கடலின் ஒரு துளி 

13 கருத்துகள்:

  1. peyarai pottu kattoorayai pathingada mudalla...

    Umar TNTJ

    பதிலளிநீக்கு
  2. Umar TNTJஇது வரை துரும்பைக் கூட அசைக்காத்து ஏன்?

    பதிலளிநீக்கு
  3. சகோதர்களே சிந்தியுங்கள்

    அனைவரும் முஸிலிம்களே அதில் இவர்கள் மட்டும்தான் நீயா நானா போடிப்போடுவது

    இதற்கு பதில் கூறுபவர் யாராக இருந்தாக்கா கூறுங்கள்


    அனைத்து முஸ்லிம்களும் ஒன்று பட வேண்ண்டும்
    என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்காஇல்லையா.

    பதிலளிநீக்கு
  4. இதுவரை அண்ணன் முஸ்லிம்களோடு கூட்டாக இருக்கவில்லை என்று சகோரதரர் எழுதி உள்ளார் ..அதையும் தாண்டி அண்ணனின் சிந்தனை எப்படி உள்ளது என்பதை எழுத தவரி விட்டார் அனநினின் பார்வையில் ஆர்.எஸ்.எஸ் காரர்களை விட மோசமானவர்கள்,யார் என்றால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள்தான் அதனால்தான் பகிரங்கமாக அவரது கூட்டத்திலேயே உளவுத்துறையே குறித்துக்கொள் இவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று கூறும் அளவுக்குத்தான் அண்ணனின் சிந்தனை உள்ளது எனவே அவரிடம் நீங்கள் ஒற்றுமையை எதிர்பார்த்தது தவறு ..ஆனாலும் இறைவன் நாடினால் சமூதாய சிந்தனை அவருக்கும் வர வாய்ப்பு உள்ளது
    ஹமீது பைசல்

    பதிலளிநீக்கு
  5. கேரோ செய்து சொன்னதை மறுத்து சொல்லாததை சொன்னதாக சொல்லி இயக்கம் வளர்க்க முனையும் போக்கு உங்களிடம் மாறும் வரை பெயரில்லாமல் கருத்துக்களை பதிவு செய்வது தவரில்லை கேட்ட கேள்வியில் தவரிருந்தால் பதில் சொல்.....

    பதிலளிநீக்கு
  6. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹமதுல்லாஹ்,

    கடந்த சில நாட்களாகவே நான் கவனித்ததில் எனக்கு புலப்பட்ட ஒரு விஷயம் தமிழகதில் உள்ள இயக்கங்கள் அனைத்தும் தங்களை வளர்த்துக் கொள்ள கையில் எடுத்த இந்த ஆயுதம் தான் tntj வினர் மீது கரிசனம் காட்டுவது போல் பதிவுகளை போட்டு அவர்களை விமர்சிப்பது.இந்த ந(ன்)டு நிலையாளர்கள் வந்து ஆ வூ ன்னு கம்மென்ட் போட்டு tntj வினரை திட்டுவது எனபது வாடிக்கை ஆகி விட்டது.ஆனால் மறுக்க முடியாத ஒரு உண்மை தமிழகத்தில் உள்ள அணைத்து
    ஒன்று சேர்த்த பெருமை tntj வை சேரும் அல்ஹம்துலில்லாஹ்

    இப்படிக்கு உங்கள் சகோதரன்
    முஹம்மத்

    பதிலளிநீக்கு
  7. இந்த பதிவு நீலிக் கண்ணீர் வடிப்பதர்க்காக்வே அன்றி வேரதர்க்கும் இல்லை. tntj வினர் தெளிவாக தெரிவித்து விட்டனர் எந்த அமைப்பினர் உதவியும் எங்களுக்கு தேவை இல்லை என்று. பிறகு ஏன் இந்த பதிவு.

    பதிலளிநீக்கு
  8. என்னுடைய மகன் சபிடமாட்ன்ங்குரான் அதற்காக விட்டுவிடவ முடியும் அவர்களும் முஸ்லிம்கள் தானே சகோதரா HAMEED

    பதிலளிநீக்கு
  9. சிறைவாசிகளுக்கு உதவ மறுத்தது ஏன்?
    சிறைவாசிகளின் வழக்குகளுக்கோ அவர்களின் குடும்பங்களுக்கோ நான் உதவவில்லை என்றும் மற்றவர்கள் உதவுவதைத் தடுத்தேன் என்றும் ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

    தமுமுக ஆரம்பிக்கப்படுவதற்கு நான் சிறைவாசிகளுக்கு உதவி வந்தேன் என்பதை முன்னரே சொல்லி இருக்கிறேன்.
    தமுமுக ஆரம்பிக்கப்பட்டது முதல் அதில் நான் அமைப்பாளராக இருந்த காலம் வரை சிறைவாசிகளின் வழக்குகளுக்கு உதவிகள் செய்யப்பட்டு வந்தன. அவர்களின் குடும்பங்களுக்கும் உதவிகள் செய்யப்பட்டு வந்தன.
    ஆனால் குண்டு வெடிப்புக்குப் பின் அல் உம்மாவைச் சேர்ந்தவர்கள் தவிர மற்ற கைதிகளுக்கான உதவியை அப்போதைய தமுமுக செய்தது.
    பின்னர் சிறைவாசிகளின் பெயரைச் சொல்லி தமுமுக பணம் திரட்டி இயக்கம் நடத்துகிறது என்று தமுமுகவில் மாதாமாதம் உதவி பெற்ற சிலர் வெளிநாடுகளுக்குக் கடிதம் மூலம் பரப்பியதால் இனி மேல் சிறைவாசிகளுக்காக தனியாக உதவி கோருவதில்லை எனவும், இயக்கத்துக்காக திரட்டப்படும் நிதியில் இருந்து இயன்ற உதவிகள் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
    இது பற்றி அன்றைய உணர்வில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. சிறை வாசிகளுக்கு தமுமுக உதவவில்லை எனக் கூறியவர்கள் மாதாமாதம் தமுமுகவில் உதவி பெற்று அளித்த வவுச்சர்களையும் உணர்வில் வெளியிடும் நிலை ஏற்பட்டது.
    இதன் பின்னர் சிறைவாசிகளின் குடும்பங்கள் மிகுந்த அல்லல்படுவதைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்காக உதவும் படி உணர்வில் விளம்பரம் செய்யப்பட்டது. இதற்காகவே சிறைவாசிகளால் அமைக்கப்பட்ட ட்ரஸ்டுகளுக்கு உதவுமாறும் எங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் உணர்வில் விளம்பரம் வெளியிட்டோம்.
    சிறைவாசிகளுக்காக எங்கள் முகவரிக்கு யாராவது அனுப்பினால் அதை அப்படியே சிறைவாசிகளிடம் மொத்தமாகக் கொடுத்து விடுவோம் என்று அறிவிப்பு செய்து அவ்வாறே கொடுத்தோம். சிறைவாசிகளில் சிலர் மீது நமக்கு கோபம் இருந்தாலும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதில் நாம் குறுக்கே நிற்கவில்லை.
    சிறைவாசிகளை ஜாமீனில் விடுமாறும் நாம் அரசைக் கேட்டு வந்தோம்.
    இந்த நிலையில் தான் சென்ற சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதில் தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரித்தது. ஜெயலலிதாவைச் சந்தித்து சிறைவாசிகளின் ஜாமீன் மனு பற்றி கோரிக்கையை நானே முன் வைத்தேன்.
    ஆனால் சிறையில் இருந்து சிறைவாசிகள் ஒரு அறிக்கை வெளியிட்டனர். எங்களை வைத்து தவ்ஹீத் ஜமாஅத் அரசியல் பண்ண வேண்டாம். எங்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டாம் என்று அந்த அறிக்கையில் சொல்லி இருந்தனர். இன்னும் பலவிதமான குற்றச் சாட்டுக்களையும் அதில் சுமத்தி இருந்தனர். அந்த அறிக்கையைப் பிரசுரமாகவும் கோவை முழுவதும் விநியோகம் செய்தனர்.
    நாங்கள் குரல் கொடுப்பதால் பாதிப்பு ஏற்படும் என்று சிறைவாசிகள் கருதுவதால் அவர்கள் விஷயமாக எதுவும் பேச வேண்டாம் என்று முடிவு செய்து அவர்கள் குறித்து பேசுவதை நிறுத்திக் கொண்டோம். கோவை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நான் உறையாற்றச் சென்ற போது அந்தக் கூட்டத்திலேயே அந்த அறிக்கையை விநியோகம் செய்தனர். எங்களை வைத்து அரசியல் நடத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அப்பட்டமாக அறிவித்த பின்னர் அவர்கள் பற்றி பேசுவதை நாம் நிறுத்திக் கொண்டோம்.
    இதன் காரணமாக நாங்கள் இவர்கள் விஷயத்தில் ஒதுங்கி இருந்தாலும் அவர்கள் எங்களை அணுகும் போது பழைய சம்பவங்களை மனதில் வைத்து நாம் நடந்து கொள்ளவில்லை.
    அந்த அடிப்படையில் கடந்த மாதம் சிறைவாசிகள் சார்பில் எங்களைச் சந்தித்து எங்கள் விடுதலைக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்துல் பாசித் வந்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினார்.
    நாம் பழைய சம்பவங்கள் எதையும் மனதில் வைக்காமல் அவர்களை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யுமாறு முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் கோரிக்கை மனு அளித்தோம்.
    சிறையில் உள்ளவர்களைப் பொருத்த வரை அவர்கள் குழப்ப நிலையில் இருப்பார்கள். எனவே அவர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்லி இருந்தாலும் அவர்களுக்கான உதவிகளை மறுக்கக் கூடாது என்று தான் நடந்து வந்துள்ளோம்.
    சிறைவாசிகளுக்கு உதவுங்கள் என்று மக்களிடம் கேட்பதைத் தான் நிறுத்திக் கொண்டோம். ஆனால் இயக்கப் பணிகளுக்காகக் கிடைக்கும் நிதியில் இருந்து இப்போதும் நம்மை அணுகும் சிறைவாசிகளுக்கு உதவிகள் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.
    மேலும் விபரம் அறிய http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/siraivasikaluku_uthavavillai/ வீடியோவை பார்க்கவும். http://onlinepj.com/thamizaka-thavheed-varalaru/alumma_pirachanai_enna/ அனஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான ஆதாரத்தை சமர்பிதுள்ளீர்கள் சகோதரர்.ஜஜாகல்லாஹ் ஹைர்.அடிப்படை விஷயத்தை என்ன வென்று தெரிந்து கொள்ளாமல் anti tntj வினர் tntj வினரை பற்றி என்ன சொன்னாலும் இந்த தலத்தில் அது பிரசுரிக்கப் படும் எனபது இப்பொழுது அல்ல இதற்க்கு முன் இங்கு பதியப் பட்டுள்ள சில கட்டுரைகளை வைத்தே நாம் புரிந்து கொள்ளளலாம்.

      நீக்கு
  10. http://onlinepj.com/thamizaka-thavheed-varalaru/alumma_pirachanai_enna/


    http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/siraivasikaluku_uthavavillai/


    அனஸ்

    பதிலளிநீக்கு
  11. இந்த தளத்தை நடத்துபவர் யார் என்று கேட்டும் பதில் இல்லை ஒரு வேலை ராமசுப்புவாக இருக்கலாம்,இப்படி பெயர் இல்லாத தளத்தில் comment போடும் நல்லவர்களுக்கு?tntj பற்றிய அனைத்து குற்றசாட்டையும் நேரில் சந்திக்க நாங்கள் தயார்,ஒரு முடிவை எதிர்பார்த்தால் எங்களை நேரில் தொடர்பு கொள்ளவும்,நீங்கள் எங்கு இருந்தாலும் நாங்கள் உங்களை சந்திக்க வருகிரோம்,இல்லை நான் tntj பற்றி பேசுபவன் மட்டும் தான் என்றால் தொடரட்டும் உங்கள் பணி,இந்த தளத்தை நடத்தும் பெயரில்லா/ராமசுப்பு,ஒரு கருத்தை பதிந்த பின் அதை சந்திக்க திரானி உள்ளவன் தான் மனிதன்,உங்களை சந்திக்க முகவரியே இல்லையே அப்போ நீங்கள்?

    நேரில் விவாதிக்க tntj மர்கஸ் lbk வை தொடர்பு கொள்ளவும்..அல்லது என்னை தொடர்பு கொள்ளவும் உங்களை உங்க இடத்தில் சந்திக்கிறேன்.

    தாவுத் அலி
    00918015152813

    பதிலளிநீக்கு