Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 2 ஜனவரி, 2013

திப்புசுல்தானின் ஏவுகணைக்கு டி.ஆர்.டி.ஓ அங்கீகாரம்!


பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கடைசி வரை போராடி வீரமரணம் அடைந்த மாவீரன் திப்புசுல்தானின் போர் நவீன தொழில்நுட்பத்திற்கு நீண்ட காலத்திற்கு பிறகு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உலக போர் வரலாற்றிலேயே எதிரிகளுக்கு எதிராக முதன் முதலாக இரும்பால் தயாரிக்கப்பட்ட ஏவுகணையை பயன்படுத்திய திப்புவின் ஸ்ரீரங்கப் பட்டினத்தில் உள்ள கோட்டையின் சிதிலங்களை டிஃபன்ஸ் ரிசர்ச் டெவலப்மெண்ட் ஆர்கனைசேசனின்(டி.ஆர்.டி.ஓ) குழு சென்று பார்வையிட்டது.

18-ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் நவீன தொழில் நுட்பம் இதர நாடுகளை விட வளர்ச்சி அடைந்திருந்தது என்பதற்கான ஆதாரம் தான் திப்புவின் ஏவுகணை தொழில்நுட்பம் என்று டி.ஆர்.டி.ஓ சீஃப் கண்ட்ரோலர் டாக்டர் டபிள்யூ.செல்வமூர்த்தி கூறினார். கோட்டை மற்றும் ராக்கெட் கோர்ட் ரூம் ஆகியவற்றை ஏவுகணை அருங்காட்சியமாக மாற்ற அவர் சிபாரிசு செய்துள்ளார். நவீன ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தையாகவும் திப்பு சுல்தான் கருதப்படுகிறார். 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டீஷாருடன் நடந்த போரில் 2 கி.மீ தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்குவதற்கான ஏவுகணையை திப்புவின் ராணுவம் தயாரித்திருந்தது. ஆனால், அந்த கோட்டை இன்று இடிந்துபோய் கிடக்கிறது.
சட்டவிரோத ஆக்கிரமிப்புகளும் கோட்டையின் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண டி.ஆர்.டி.ஓ குழு, கர்நாடகா முதன்மை செயலாளருக்கும், ஆர்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியாவுக்கும், மாநில தொல்பொருள் ஆய்வு துறைக்கும் கடிதம் எழுதப்போவதாக அறிவித்துள்ளது.
ராக்கெட் தொழில்நுட்பத்தின் அடிப்படை தத்துவங்கள் குடிக்கொண்டிருக்கும் இப்பகுதியை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இவ்வாறு கையாளுவது மிகவும் துயரமானது என்று டாக்டர் செல்வமூர்த்தி கூறினார். ஏவுகணை அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தானின் ராக்கெட்டை தவிர இந்தியாவின் பிரம்மோஸ், பிருத்வி,அக்னி உள்ளிட்ட அனைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளின் உருவங்கள் நிறுவப்படும் என்று செல்வமூர்த்தி மேலும் தெரிவித்தார்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக