Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

குன்னம் வட்டத்தில் மே 2 ஆம் தேதி ஜமாபந்தி .....


குன்னம் வட்டத்தில் 1,422 ஆம் பசலி ஆண்டு வருவாய் கிராமங்களுக்கான தீர்வாயம் (ஜமாபந்தி) வருகின்ற 2-ந் தேதி தொடங்குகிறது.

ஜமாபந்தி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெறும்.

2-ந் தேதி
இந்த வருவாய் தீர்வாயம் 2-ந் தேதி முதல் தினந்தோறும் காலை 9 மணிக்கு ஆரம்ப மாகும். 2-ந் தேதி வடக்கலூர் பிர்காவிற்கு உட்பட்ட திருமாந்துறை,பெண்ணகோணம்(வடக்கு)(அட நமதூருங்க தான் ), பெண்ண கோணம்(தெற்கு), வடக்கலூர், ஒகளூர்(மேற்கு), ஒகளூர் (கிழக்கு), சு.ஆடுதுறை, அத்தி யூர்(வடக்கு), அத்தியூர்(தெற்கு), கிழுமத்தூர்(வடக்கு), கிழுமத் தூர்(தெற்கு), அகரம்சிகூர், வசிஸ்டபுரம், கீழப்பெரம்ப லூர், வயலப்பாடி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், நடைபெறும்.

3-ந் தேதி
3-ந் தேதி கீழப்புலியூர் பிர்கா விற்கு உட்பட்ட நன்னை (கிழக்கு), நன்னை (மேற்கு), பெருமத்தூர் (வடக்கு), பெருமத்தூர் (தெற்கு), சிறுமத்தூர், கீழப்புலியூர் (வடக்கு), கீழப் புலியூர் (தெற்கு), எழுமூர் (மேற்கு), மழவராயநல்லூர், எழுமூர் (கிழக்கு), ஆண்டிக் குரும்பலூர், அசூர், சித்தளி (கிழக்கு), சித்தளி (மேற்கு), பேரளி (வடக்கு), பேரளி (தெற்கு), ஒதியம் ஆகிய வரு வாய் கிராமங்களுக்கும், நடை பெறும்.

9-ந் தேதி
9-ந் தேதி வரகூர் பிர்காவிற்கு உட்பட்ட ஓலைப்பாடி (கிழக்கு), ஓலைப்பாடி (மேற்கு), பரவாய் (மேற்கு), பரவாய் (கிழக்கு), புது வேட்டக்குடி, துங்கபுரம் (வடக்கு), துங்கபுரம் (தெற்கு), காடூர் (வடக்கு), காடூர் (தெற்கு), கொளப்பாடி, வர கூர், குன்னம், பெரியம்மா பாளையம், பெரிய வெண்மணி (மேற்கு), பெரிய வெண்மணி (கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் நடை பெறுகிறது.

விவசாயிகள் மாநாடு
ஜமாபந்தி இறுதிநாளான 9-ந் தேதி அன்று குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மாநாடு மாவட்ட வருவாய் அலுவலர் சுப்ர மணியன் தலைமையில் நடைபெறும்.

ஜமாபந்தியில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்வார்கள். எனவே பொது மக்கள் ஜமாபந்தியில் பட்டா, பட்டா மாறுதல், பெயர் மாறுதல், நில அளவை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட தனிப்பட்ட கோரிக்கை மற்றும் பொதுவான கோரிக்கை மனுக்களை அளித்து உடனடித்தீர்வு காணலாம்.

மேற்கண்ட தகவலை தாசில்தார் செல்வம் தெரிவித்துள்ளார்.

நன்றி தினத் தந்தி

1 கருத்து: