Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 8 ஏப்ரல், 2013

பொறுப்பற்ற ஊடகங்கள் முஸ்லிம்களை தீய சக்திகளாக சித்தரிக்கின்றன! - கட்ஜு!


பொறுப்பற்ற ஊடக பணியின் மூலமாக ஊடகங்கள் முஸ்லிம் சமுதாயத்தை தீய சக்திகளாக சித்தரிப்பதாக ப்ரஸ் கவுன்சில் ஆஃப்
இந்தியாவின் சேர்மனும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
தி ஹிந்து பத்திரிகை சார்பாக ஏற்பாடுச் செய்யப்பட்ட “Reporting Terror: How Sensitive is the media?” என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றினார் கட்ஜு. 

அப்பொழுது அவர் கூறியதாவது; “பாரபட்சமான அணுகுமுறைகளால் தாங்கள் அநீதிக்கு ஆளாக்கப்படுகிறோம் என்ற எண்ணம் முஸ்லிம்களிடையே அதிகரித்து வருகிறது. ஒரு குண்டுவெடிப்போ அல்லது அதற்கு சமமான நிகழ்வுகளோ நடக்கும்பொழுது சில மணிநேரங்களிலேயே இதன் பொறுப்பை இந்தியன் முஜாஹிதீனோ, ஹர்கத்துல் ஜிஹாதி இஸ்லாமோ அல்லது வேறு ஏதேனும் முஸ்லிம் அமைப்புகளோ ஏற்றுக்கொண்டதாக கூறும் ஈ-மெயிலோ, எஸ்.எம்.எஸ் செய்தியோ கிடைத்ததாக தொலைக்காட்சி சேனல்கள் செய்தி வெளியிடும். இச்செய்தியை யாரேனும் விஷமத்தனமாக அனுப்பியிருக்கலாம். ஆனால், அன்றைய தினம் தொலைக்காட்சி சேனல்களிலும், மறு தினம் பத்திரிகைகளிலும் இதே செய்தி வெளியாகும். இதன் மூலம் அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்ற செய்தியை ஊடகங்கள் வழங்குகின்றன. 
முஸ்லிம்கள் என்றால் குண்டு வைப்பர்கள் என்று பொது மக்கள் கருதுவதற்கு இச்செய்திகள் காரணமாகின்றன. இத்தகைய செய்திகள் மூலம் வகுப்புவாதத்திற்கு ஊக்கமளிக்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்கள் வேலைவாய்ப்புகளிலும், வங்கிக் கடன்களை பெறுவதிலும் பாரபட்சத்தை அனுபவிக்கின்றார்கள். இது மாபெரும் அநீதியாகும். 
அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக ஏப்ரல் 15 ல் துவங்கவிருக்கும் அரசு சாரா அமைப்பின் (தி கோர்ட் லாஸ்ட் ரிஸார்ட்) முதன்மை காப்பாளர் பொறுப்பை (chief patron) நான் ஏற்றுக்கொள்வேன்.” இவ்வாறு கட்ஜு கூறினார். 

2 கருத்துகள்:

  1. நீதியரசர் கன்சு அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக ,


    இந்தியாவில் ஒடுக்கப் படும் முஸ்லிம்களுக்காக துணிந்து குரல் கொடுக்கும் மற்றொரு நாயகன் நீதியரசர் மார்கண்டேய கட்ஜு.இந்திய வரலாறுகளை நாம் திரும்பி பார்த்தல் நீதியின் பக்கம் நின்று முஸ்ளிம்களுக்கு குரல் கொடுத்தவர்களுக்கு நம் இந்திய தேசம் துப்பாக்கி தோட்டக்கல்லையே பரிசாக வழங்கி இருக்கிறது.அன்று காந்தி,நேற்று கர்க்கரே.இப்பொழுது மார்கண்டேய கட்ஜு அவர்கள் குரல்கொடுத்து வருகிறார்கள்.நீங்கள் நலமுடன் வாழவும் இறைவன் உங்களுக்கு ஹிதாயத் தந்து நேர்வழி பெறவும் அந்த ஏக இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்.


    உங்கள் சகோதரன் முஹம்மத்

    பதிலளிநீக்கு

  2. லப்பைகுடிகா டு/நியூஸ் நடத்துனருக்கு ) உனக்கு முகம் இருக்கா உன் பேரு என்ன
    நீ உண்மையில் முஸ்லிம் தானா ? அல்லது காபிரா...

    இந்தியாவில் ஒடுக்கப் படும் முஸ்லிம்களுக்காக துணிந்து குரல் கொடுக்கும்
    லப்பைகுடிக்காடு பொதுமக்கள்

    பதிலளிநீக்கு