Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

ஸ்கூல் சலோ பிரச்சாரம் டெல்லியில் துவங்கியது!


சமூகத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை கொண்டு சேர்ப்பதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் நடத்தி வரும் ஸ்கூல் சலோ பிரச்சாரம் இவ்வாண்டு டெல்லியில் துவங்கியது. வரலாறு துயில் கொள்ளும் டெல்லி செங்கோட்டையில், கல்வியின் முக்கியத்துவத்தையும், அனைத்து குழந்தைகளுக்குமான கல்வி கற்பதன் உரிமையையும் எடுத்தியம்பும் முழக்கங்களையும், அட்டைகளையும் ஏந்தி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற பேரணியின் மூலம் இந்நிகழ்ச்சி துவங்கியது.


எஸ்.சி-எஸ்.டி கமிஷனின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தாஜுத்தீன் அன்ஸாரி இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். டாக்டர் தாஜுத்தீன் அன்ஸாரி தனது உரையில், "ஒடுக்கப்பட்ட பிரிவினரில் பெண் குழந்தைகளுக்கு கல்வியை அளிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்" என்றார்.




பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் ஒ.எம்.அப்துல் ஸலாம் தலைமை வகித்தார். அவர் தனது உரையில், "நாட்டின் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை அளிப்பது சமூகத்தின் கடமையாகும். சாதி, மதம், பாலினம் பாராமல் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்கவேண்டும். கிராமப்பகுதிகளில் ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவ பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஸ்கூல் சலோ பிரச்சாரத்தின் மூலம் இவ்வாண்டு ஒரு லட்சம் ஸ்கூல் கிட்(பள்ளிக்கூடம் செல்ல தேவையான புத்தகங்கள், இதர பொருட்கள் அடங்கிய பை) விநியோகிக்கப்படும்" என்றார்.




இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரபல எழுத்தாளரும், ஆல் இந்தியா எஜுகேஷனல் மூவ்மெண்டின் துணைத் தலைவருமான மன்சூர் ஆகா கூறுகையில், "ஏழை மாணவர்களை கல்வியில் ஊக்கமூட்டும் பாப்புலர் ஃப்ரண்டின் பணி பாராட்டத்தக்கது" என்றார்.மேலும் இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் கம்யூனிட்டி டெவல்ப்மெண்ட் துறையின் பொறுப்பாளர் சி.கே.ஆஸிஃப், டெல்லி மாநில தலைவர் அன்ஸார் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.




கல்வி சர்வே, விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பள்ளிக்கூடங்களில் பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவர்களை கண்டுபிடித்து அவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது, பள்ளிக்கூட கிட் விநியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஸ்கூல் சலோ பிரச்சாரம் மூலம் நடத்த உள்ளது.

தகவல் மின்னஞ்சல் மூலமாக
அப்துல் ஹமீது

3 கருத்துகள்:

  1. பெயரில்லா4 மே, 2013 அன்று AM 11:54

    அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்புள்ள சைட் நடத்துனருக்கு லப்பைகுடிகா ட்டின் மக்களின் நலன் கருதி அன்பான வேண்டுகோள் என்ன என்றால்
    1 நீங்கள் உண்மையில் லப்பைகுடிகாடுதானா ?
    2 நீங்கள் உண்மையில் முஸ்லிம் தானா ?
    3 உங்கள் வீட்டின் பெயரை தகப்பனார் பெயரை தெளிவாக போடவும் ,

    தயவு செய்து தெளிவான பதில்
    இப்படிக்கு
    பொது நலன் வேண்டி
    அக்பர் பாஷா
    துபாய்

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா4 மே, 2013 அன்று PM 12:04

    porattam yendral
    pombalaye alithu poreengale
    vetkama illa
    pombala porikiggala.

    nee mattum pona porattam
    pombalaye alaitthaal veriyattam

    islatthil yenda sattatulada irukku pombalaye vaithu porattam seyya solli

    badil soluppa,

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா4 மே, 2013 அன்று PM 12:06

    site down down down down down down down down

    closed please

    vetkam vetkam

    பதிலளிநீக்கு