Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 11 ஏப்ரல், 2013

தாருஸ்ஸலாம் தவ்ஹீது ஜமாஅத் மாதாந்திர அமர்வு


   33:66  يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا
33:66நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள்.
33:67   وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا
33:67“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள.
33:68   رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا
33:68“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” (என்பர்).
அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும்!

குர்ஆன் மற்றும் ஹதீஸின் ஒளியில், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து, அதனை தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்கவும், நமது ஊர் சமுதாய மக்கள் அனைவரும் அதன்பால் அழைக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் உருவானதுதான் தாருஸ்ஸலாம் தவ்ஹீது ஜமாஅத் (லப்பைகுடிக்காடு). அதன்   துபை மையம். சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை   (05 -04– 2013)  மக்ரிப் தொழுகைக்கு பிறகு  நமது ஜமாஅத்தின் மாதாந்திர அமர்வு, டாலரெக்ஸ்  டெக்ஸ்டைல்  பின்புறம் உள்ள லாஸ்ட் ஹவர்
ரெஸ்டாரண்டில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. அதில் நம் உறுப்பினர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டார்கள்.
சகோதரர்  N R முஹம்மது ஜஹாங்கீர் அவர்கள் சூரத்துல் பகராவின் (2:255)வசனமானஆயத்துல் குர்ஸியின் மகத்துவம் என்ற தலைப்பில் மார்க்க உரையாற்றினார்கள்.

சகோதரர் M A ஃபாரூக் அவர்கள் நமது நிர்வாகத்தில் வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 15 வரை நிகழ உள்ள கோடைக்கால பயிற்சி முகாம் பற்றியும், பெண்கள் இன்றைய நிலையில் மார்க்க அறிவு பெறுவது எவ்வளவு அவசியம் என்பது பற்றியும், அதற்கு நமது ஜமாத் ஜூன் 2013 முதல் ஏற்பாடு செய்துள்ள பெண்கள் இஸ்லாமிய கல்லூரியில் இணைந்து பயன் பெறுங்கள் என்று அழைப்பு விடுத்தும், மற்றும் வட்டி ஒழிப்பு திட்டம் தாயகத்திலும் துபையிலும் எப்படி சிறப்பாக நடைபெறுகிறது, அதில் தங்களை இணைத்துக் கொள்ளாதவர்கள் உடனடியாக இணைத்துக் கொண்டு பயன்பெறுங்கள் என்று அழைப்பும் விடுத்தார்கள்.
சகோதரர் Y ரஃபி அஹமதுதாருஸ்ஸலாம் மழலையர் பள்ளியின் இரண்டு ஆண்டு கால கணக்குகளை விளக்கி இதன் பிறகு வருங்காலத்தில் செயல்பட உள்ள நிலைகளையும்  விளக்கினார்கள்.

மேலும் அமர்வுக்கு வருகை புரிந்திருந்த அனைத்து சகோதரர்களின் மேலான ஆலோசனைக்குப் பிறகு  சகோதரர் K G சையதுல்லாஹ் அவர்களின் நன்றி உரை மற்றும் துஆ வுக்குப்பின் அமர்வு சிறப்புடன் கலைந்தது. புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!
தாருஸ்ஸலாம் தவ்ஹீது ஜமாஅத் லப்பைக்குடிக்காடு, துபை மையம்  ஜஸாகல்லாஹ்  ஹைரன் .
மேலும் விபரங்களுக்கு:  M.A.FAROOQ 050 5759420,  N.R.JAHANGIR 050 5885946,               Y. RAFI AHAMED 055 9105169, MANSOOR BABU 050 7659759.

3 கருத்துகள்:

  1. சகோதரர் Y ரஃபி அஹமதுதாருஸ்ஸலாம் மழலையர் பள்ளியின் இரண்டு ஆண்டு கால கணக்குகளை விளக்கி இதன் பிறகு வருங்காலத்தில் செயல்பட உள்ள நிலைகளையும் விளக்கினார்கள்.
    மேலும் பங்குத்தாரர்களின் பணத்தை எப்படி ஆட்டை போடுவதுனு விரிவாக விளக்கினார் என்று சேர்த்து கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும், கருத்து வெளியிட்டுள்ள பெயர் போட தைரியம் இல்லாத(இன்னும் பெயர் வைக்கவில்லையோ என்னவோ) முண்டத்திற்கு, ஒரு ஜமாத்-தின் பணத்தை கையொப்பம் இட்டு வாங்கிவிட்டு கணக்கு காட்டாமல் எப்படி ஆட்டைய போடுவது,ஒட்டு மொத்த ஜமாத்தையும் அதன் சார்ந்த சொத்துக்களையும் அடையாளம் தெரியாமல் ஆவணங்களை அழித்து எப்படி ஆட்டைய போடுவது, சகோதர முஸ்லீம்க -ளை குற்றப்படுத்தவும், கேவலப்படுத்தவும்,உண்மையை அறிந்துக்கொண்டே ,அல்லாஹ்-வின் அச்சமின்றி எப்படி பொய்யுரைப்பது என்பதை பேரியக்க பித்தும், ஆணவமும்,குரோதமும் கொண்ட கருத்துரைத்த முண்டத்திடம் கேட்டால் அழகான விளக்கம் கொடுப்பார். பெயரில்லா முண்டம் முகவரியோடு கருத்துரைத்தால் தேவையான விளக்கம் கண்ணியத்தோடு கிடைக்கும்.
    Y.Rafi Ahamed,
    050-5644010

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகவரியோடு உங்களுக்கு பல பங்குதாரர் மெயில் போட்டும் பதில் போடாமல் இருக்கும் வீர?சீகாமனி எல்லாம் மூகவரி கேட்க்குது,இப்படி முகவரி கேட்டு தான் இந்த வலைதளத்தில் இதை பதிந்திர்களா?இப்படி கத்துரதுலாம் பழைய காலம் நீங்களா இல்லை tntj வா பணத்தை ஆட்டை போட்டதுனு எங்களுக்கு இப்போ நல்லாவே தெரிந்து விட்டது.இந்த தளத்துக்குலாம் முகவரி தேவை இல்லை.ஏனென்றால் இந்த தளதுக்கே முகவரி இல்லை.சரி,உங்களை தான் நேரடியாக சந்திக்க தயாருனு tntj -lbk சொல்லி இருக்காமே..அப்புறம் நீங்கள் எல்லாம் இங்கேயே கத்துரிங்கே,அவங்களே நேரடியாக சந்திங்களேன் அப்போ தெரியும் இந்த முண்டதின் தலை எங்கு போகும் என்று..இப்போயம் முகவரி தர மட்டேன்,முதலில் இந்த தளம் யாருடையதுனு முகவரி வாங்குகள்,அப்புறம் தரேன்.

      நீக்கு