Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 30 ஜனவரி, 2014

அந்த 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூர் அருகே பெண் ஆசிரியரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் 3 பேருக்கு பெரம்பலூர் கோர்ட்டில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

வழிப்பறி வழக்கு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா அத்தியூரை சேர்ந்தவர் பவுலின் மேரி. லப்பைக்குடிகாடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 2007–ம் ஆண்டு ஜூன் மாதம் வேப்பூரில் இருந்து புதுவேட்டக்குடி இடையே மொபட்டில் சென்ற போது 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பவுலின்மேரியை தாக்கி அவர் அணிந்திருந்த 9 பவுன் தாலிச்சங்கிலி, செல்போன், ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டது.
இந்த சம்பவம் குறித்து பவுலின்மேரி குன்னம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரியலூர் மாவட்டம் வல்லத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் (வயது 30), கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா செவ்வேரியை சேர்ந்த ரமேஷ் (32), திருவள்ளூர் மாவட்டம் காக்கனூர் தாலுகா தண்ணீர்குளத்தை சேர்ந்த மாணிக்கம் (28) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து பெரம்பலூர் சப்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
7 ஆண்டு சிறை

பின்னர் 3 பேரையும் இன்ஸ்பெக்டர் சோலைமுத்து, சப்இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் பெரம்பலூர் சப்கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி முகமது பாருக், ஆசிரியரை தாக்கி வழிப்பறி செய்த சம்பவத்தில் கொளஞ்சிநாதன், ரமேஷ், மாணிக்கம் ஆகிய 3 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதத்திற்கு சிறைதண்டனை அனுபவிக்குமாறும் நீதிபதி தீர்ப்பு விதித்தார். இந்த தீர்ப்பை தொடர்ந்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக