Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 9 ஜனவரி, 2014

ஊடகவியலாளர்களின் கருத்துரிமைக்கு அச்சுறுத்தல் கூடாது:வீரபாண்டியன் மீதான நடவடிக்கையை கண்டித்து சமூக, அரசியல், மனித உரிமை ஆர்வலர்கள் அறிக்கை!

சன் டி.வியில் அரசியல் விமர்சகராக பணியாற்றி வரும் திரு.வீரபாண்டியன் அவர்களை அத்தொலைக்காட்சி பணியில் இருந்து நீக்கக்கோரி மதவாத சக்திகள் வலியுறுத்தி வரும் சூழலில் அதனை கண்டித்து அரசியல் மற்றும் சமூக தலைவர்கள், மனித உரிமை மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்,எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பது:இந்தியா என்பது ஜனநாயக நாடு, இதில் கருத்துரிமை என்பது நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமையாகும். இந்த கருத்துரிமை என்பது ஊடகவியலாளர்கள் உட்பட அனைத்து இந்திய குடி மக்களுக்கும் பொதுவானது.இந்நிலையில் மதவாதத்திற்கு எதிராகப் பேசியதால் சன் தொலைக்காட்சியின் அரசியல் விமர்சகர் திரு. வீரபாண்டியன் அவர்களை அத்தொலைக்காட்சிப் பணியிலிருந்து நீக்க வேண்டுமென மதவாத சக்திகள் வலியுறுத்தியுள்ளதை மதசார்பின்மை மீது நம்பிக்கைக் கொண்டுள்ள இந்த கூட்டறிக்கையில் கையொப்பம் ஈட்டுள்ள நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இது பேச்சுரிமைக்கும்,கருத்துரிமைக்கும் எதிரான செயல் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.சென்னையில் சில வாரங்களுக்கு முன்பு மனித உரிமை அமைப்பு ஒன்றின் சார்பில்முசாபர் நகரில் சிறுபான்மையினர் மீதான வன்முறை குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டசன் தொலைக்காட்சி வீரபாண்டியன் பா.ஜ.க. மீது சில விமர்சனங்களை முன் வைத்துப் பேசியுள்ளார். இந்தப் பேச்சினைப் பதிவு செய்து சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து பா.ஜ.கவின் மாநில அலுவலகச் செயலாளர் திரு.கி.சர்வோத்தமன் என்பவர் சன்தொலைக்காட்சிக் குழும மேலாண் இயக்குநருக்கு சென்ற 23.12.2013  அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் திரு.வீரபாண்டியன் பேச்சு இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்துவதாகவும்,அவர் சன் தொலைக்காட்சியில் நடத்தும் நிகழ்ச்சிகள் நடுநிலையோடு இருக்காது எனவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளார். மேலும்,அவர் முன்நின்று நடத்தும் விவாத நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. சார்பில் யாரும் கலந்துக் கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜயபாரதம்’பத்திரிகையில் வீரபாண்டியனை கண்டித்தும், அவருக்கு மிரட்டல் விடுத்தும் கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். முகநூலில் கூட திரு. வீரபாண்டியன்மீது வன்முறையை ஏவி வருபவர்கள் தங்கள் வன்முறை போக்கை மறந்து விட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார்மனு அளித்துள்ளதாக தெரியவருகிறது.இதன்பின்னர், கடந்த வாரம் சனிக்கிழமை முதல் அவர் நடத்தும் நிகழ்ச்சிஒளிபரப்பப்படவில்லை.

அணுகுமுறை ஜனநாயகத்தின் அக்கறைக் கொண்டோராகிய எங்களுக்கு மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது .பா.ஜ.க.வின் இந்தச் செயல், உண்மை நிலையுடன் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளைக் கடந்த பதினேழு ஆண்டுகளாக நடத்தி வரும் திரு. வீரபாண்டியன் மீது தனிப்பட்ட முறையில் தொடுக்கப்பட்ட தாக்குதலாக கருதுகிறோம். திரு.வீரபாண்டியன் தனக்கென சொந்தக் கருத்து வைத்திருப்பதற்கும், அதனை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உண்டு என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

ஆனால், அவர் சன் தொலைக்காட்சியில் நடத்தும் விவாதங்களில்எங்கேயும் தன் சொந்தக் கருத்தைப் பிரதிபலிப்பது இல்லை என்பதோடு, மிகவும்கவனமாகவும், உண்மை நிலையோடு அவரது நிகழ்ச்சிகள் இருக்கும் என்பதைஅனைவரும் அறிவோம்.ஊடகங்களில் ஒரு ஊடகவியலாளர் நடுநிலையாக இருந்து கருத்துரைக்க வேண்டுமென்பது தான் அறம் (Ethics).அதனாலேயே அவருக்குச் சொந்த கருத்தோஅல்லது அரசியல் பார்வையோ இருக்கக் கூடாது என்பது தவறானது.

இதரகுடிமக்களுக்கு உள்ள அனைத்து அரசியல் உரிமைகளும் ஊடகவியலாளர்களுக்கும் உண்டு.பல்வேறு வகையில் அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களுக்கும் இடமளித்துவரும் சன் தொலைக்காட்சி நிர்வாகம் திரு. வீரபாண்டியன் நடத்தும் அரசியல்விவாத நிகழ்ச்சித் தொடர ஆவன செய்து, கருத்துரிமை, பேச்சுரிமைக்குதொடர்ந்து மதிப்பளித்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.இந்திய அரசியல் சட்டம் வகுத்துள்ள மதசார்பின்மைக்கு அச்சுறுத்தல்விடுத்து செயல்பட்டு வரும் மதவாதக்கட்சிகள் இதுபோன்று ஊடகவியலாளர்களுக்குநேரடி அச்சுறுத்தல்கள் விடுப்பதை அனைத்து அச்சு மற்றும் காட்சிஊடகத்தினர் கண்டிக்க முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறோம்.இவண்(ஒ-ம்)திருமிகு. கீ. வீரமணிதலைவர், திராவிடர் கழகம்திருமிகு ஞானதேசிகன் மாநில தலைவர்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி டாக்டர் இ.எம் சுதர்சன் நாச்சியப்பன் மத்திய இணை அமைச்சர் திருமிகு. பீட்டர் அல்போன்ஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு தா. பாண்டியன் மாநிலச் செயலாளர்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருமிகு. தொல். திருமாவளவன் எம்.பிதலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சிடாக்டர். எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.சட்டமன்ற கட்சித் தலைவர் மனிதநேயமக்கள் கட்சிதிருமிகு. ஜே.எஸ். ரிபாயி தலைவர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்பேரா. கே.எம். காதர் முகைதீன், Ex. எம்.பிபொதுச் செயலாளர், இந்தியன்யூனியன் முஸ்லிம் லீக்திருமிகு. அப்துல் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினர், வேலூர்திருமிகு. விடுதலை இராசேந்திரன்பொதுச் செயலாளர்திராவிடர் விடுதலைக் கழகம்கோவை கு. இராமகிருட்டிணன்பொதுச் செயலாளர்தந்தை பெரியார் திராவிடர் கழகம்திருமிகு. செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சிபேராயர் எஸ்.றா. சற்குணம் பிரதம பேராயர், ஈசிஐ நிறுவனத் தலைவர்,இந்தியசமூகநீதி இயக்கம் பேராயர் பீட்டர் பெர்னாண்டோ,மதுரை உயர்மறை மாவட்டம் பேராயர் தேவ சகாயம்தென்னிந்திய திருச்சபை, சென்னைபேரா. சுப. வீரபாண்டியன்தலைவர்,திராவிட இயக்கத் தமிழர் பேரவைதிருமிகு. பெ. மணியரசன்,தலைவர்,தமிழ்தேச பொதுவுடமை கட்சிதிருமிகு. தமிழ்ச் செல்வன் மாநில செயலாளர், தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம்திருமிகு. அ. குமரேசன் பொறுப்பாசிரியர்,தீக்கதிர்கவிக்கோ. அப்துல் ரஹ்மான் கவிஞர், எழுத்தாளர்திருமிகு. ஞாநி எழுத்தாளர், பத்திரிக்கையாளர்திருமிகு. ஹென்றி டிபேன்செயல் இயக்குநர்,மக்கள் கண்காணிப்பகம்முனைவர் வி. சுரேஷ்தேசிய பொதுச் செயலாளர்மக்கள் சிவில் உரிமைக் கழகம்பேரா. அ. மார்க்ஸ் மனிதஉரிமை செயற்பாட்டாளர்திருமிகு கோ. சுகுமாரன்மக்கள் உரிமை கூட்டமைப்புகவிஞர் மனுஷ்ய புத்திரன்பதிப்பாளர,எழுத்தாளர்திருமிகு டி.எஸ்.எஸ். மணி,பத்திரிக்கையாளரதிருமிகு. திருமுருகன் காந்திஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்திருமிகு. செந்தில்ஒருங்கிணைப்பாளர், சேவ் தமிழ்ஸ் அமைப்பு

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக