Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

சென்னை ராயபுரத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்: சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் V.H.P.!!

சென்னை ராயபுரம் பகுதியில் முஸ்லிம்கள் மீது வி.ஹெச்.பி அமைப்பினரின் தாக்குதலால் அங்கு பதட்டமான சூழல் நிலவிவருகிறது.
சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேல் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இங்கு வாழும் மக்களுடன் பரஸ்பரம் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் சமீப காலமாக இந்த பகுதியில், அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் வாழும் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக மதக் கலவரத்தை தூண்டும் வகையில் வி.ஹெச்.பி அமைப்பை சேர்ந்த விக்கி என்ற விக்ரமன், ரமேஷ், குள்ளரவி விஜி போன்றவர்கள் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பேணர்களை திறப்பது அவர்களின் கொடியை ஏற்றுவது, வன்முறை பேச்சுக்களை பேசுவது போன்ற பிரச்சனைகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இதுக்குறித்து அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்கள் சார்பாக அனைத்து இயக்கம் மற்றும் ஜமாத்களை சேர்ந்தவர்கள் கடந்த ஜனவரி 24 அன்று காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்துள்ளனர். காவல்துறை அதிகாரிகளும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என உறுதியளித்துள்ளனர்.
ஆனால் இன்று காலை ராயபுரம் லாலாகுண்டா பகுதியில் மஸ்ஜிதே நூர் பள்ளி முன்பு வி.ஹெச்.பி அமைப்பின் கொடி மற்றும் பேணர்களை வைக்க முற்ப்பட்ட போது அதற்கு அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மேற்கண்ட வி.ஹெச்.பி அமைப்பை சேர்ந்த விக்ரமன் தலைமையில் 11 க்கும் மேற்பட்ட நபர்கள் ராயபுரம் லாலாகுண்டா பகுதியில் கொட்டு அடித்துக் கொண்டு, இஸ்லாமியர்கள் வாழும் பகுதிக்குள் சென்று, அங்குள்ள மஸ்ஜிதே நூர் பள்ளி முன்பு வன்முறையை தூண்டும் வார்த்தைகளை பேசியுள்ளனர். மேலும் எவனும் உயிரோடு இருக்க முடியாது எனவும், இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு போங்கடா எனவும் மத துவேஷமாக பேசியுள்ளனர்.
இதையடுத்து ஏன் இப்படி செய்கிறீர்கள்? எனக் கேட்டவர்களை கையில் வைத்திருந்த கத்தி, அரிவாள், இரும்பு  கம்பிகளை கொண்டு தாக்க முற்ப்பட்டுள்ளனர். அப்போது இவர்களின் தாக்குதலில் அங்கு நின்றிருந்த அக்பர் என்பவரின் வலது கால் நரம்பில் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டியது.
பின்பு அங்கு இருந்தவர்களை பார்த்து இனி யாராவது போர்டு, பேணர் வைக்க எங்களை தடுத்தால் ஒருவனும் உயிரோடு இருக்க முடியாது எனவும், இரவோடு இரவாக இந்த பகுதியை எரித்து சாம்பலாக்கிவிடுவோம் எனக்கூறி தப்பாட்டம் போட்டு பள்ளிவாசல், வீடுகளை நோக்கி கற்களை எடுத்து வீசிச் சென்றுள்ளனர்.
இதுக்குறித்து விபரம் அறிந்த இஸ்லாமிய மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அப்பகுதிக்கு விரைந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து, சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வண்ணம் தாக்குதல் நடத்திய வி.ஹெச்.பி அமைப்பினரை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்க்கொள்ளவேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் இஸ்லாமிய இயக்கத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக