Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 9 ஜனவரி, 2014

யார் இந்த மர்ம நபர்.....?

மண்டபத்தை மர்மமான முறையில் புகைப்படம் எடுத்த மர்ம நபர் யார்?

இன்று நமதூரில் மேற்கு மஹல்லாவிற்கு உட்பட்ட மண்டபம் கட்டுமான இடத்தில் இரண்டு மர்ம நபர் புகைப்படம் எடுத்தனர்.

அவர்களிடம் ஒரு சிலர் விசாரித்தவரை தாங்கள்
பத்திரிக்கையிலிருந்து வந்திருப்பதாகவும், தங்களுக்கு இந்த ஊரில் பொது இடம் ஆக்கிரமிப்பு நடைபெருகிறது எனவே அங்கு நேரடியாக உரிய இடத்தில் சென்று புகைப்படம் எடுத்து வரும்படி, மேல் இடத்தில் இருந்து அறிவுறுத்தினார்கள். அதன் காரணமாக நாங்கள் இங்கு வந்து புகைபடம் எடுத்து விபரம் அறிந்து செல்லலாம் என்று வந்திருக்கிறோம் என்றனர்.


இந்த பிரச்சணையும் வரக்கூடிய காலங்களையும் நாம் கருத்தில் கொண்டு தீர்க்க ஆலோசித்து நமக்கு நாமே முடிவு எடுக்காத வரை, இந்த நிகழ்வு மட்டுமல்ல எந்த ஒரு நிகழ்காக இருந்தாலும் அதில் மூன்றாம் நபராக அண்ணியர்கள் தலையிடக்கூடும். எனவே நாம் நமக்குள் ஏற்பட்டிறுக்கும் குரோத மனப்பான்மையை கலைந்து, பொதுமக்களின் நலனை கருதி, அவர் அவர்களுக்கு நியமித்த பொறுப்பை உணர்ந்து, அல்லாஹ்வி்ற்கு அஞ்சியவர்களாக தீர்க்க முடிவு எடுக்கவேண்டும் என்பதுதான் சிறந்த பொறுப்பு தாரிகளின் தன்மை. இதுதான் நமதூர் பாமர அத்தாக்களின் எதிர்பார்ப்பும் கூட...

அறிவுள்ள ஜீவிகள் யாரும் இதை மறுக்க மாட்டார்கள்.....
நமது நிருபர்.

3 கருத்துகள்:

  1. நமக்கு எதிரி முதலில் நாம் தான்.

    என்ன தான் இருந்தாலும் (இன்ஷா அல்லாஹ் இந்த இடம் மீண்டும் மேற்கு பள்ளிவசாலுக்கு கிடைத்தாலும்) இரண்டு மஹல்லாவும் செய்கின்ற செலவுகளும் மக்களுடையது தானே!!

    மேற்கு மஹல்லா இன்று தன் சொத்தை மீட்பதற் கே செலவு செய்து கொண்டிருக்கிறது.

    இப்பொழுது கிழக்கு மஹல்லா நிர்வாகிகளுக்கு சந்தோஷமாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. அஹமது சுல்தான்11 ஜனவரி, 2014 அன்று PM 12:49

    எந்த பத்திரிகை என்று விசாரித்து (அடையாள அட்டையுடன்) சம்மந்த பட்ட பத்திரிக்கை அலுவலகத்தில் மறு உரிதிப்படுத்தியுருப்பீர்கள் என் நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அவர் போட்டோ எடுக்கும் இந்த போட்டோ எடுத்தவர் என்ன செய்து கொண்டிருதார

    பதிலளிநீக்கு