Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

வாசகர் கருத்திற்கு விளக்கம்...



மேலே உள்ள இந்த கருத்து நமது தளத்திள் சண்டையில் முடிந்த பேரூராட்சி கூட்டம் என்ற  செய்தியில் வந்த கருத்தாகும். நாங்கள் யாருக்காகவும் வழிந்து பேசவே ஆதரகாவே இந்த தளம் செயல் படாது. எங்களுடைய மன வலியை கீழே வெளியிடுகிறேம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

நாம் கிழக்கு சுன்னத்துவல் ஜமாத், மேற்கு சுன்னத்துவல் ஜமாத் அல்லது தவ்ஹீத் வாதிகள் இது போன்று ஒருவர் மற்ற வரை வெறுப்பதென்பது நாம் பிறந்த போது நம்மோடு ஒட்டிப் பிறந்த குணமல்ல. மாறாக வாழ்க்கை ஓட்டத்தில் மனிதர்கள்தான் வெறுக்ககற்றுக் கொண்டார்கள். வெறுப்பை மக்களால் கற்றுக்கொள்ள முடியும் எனும்போது அவர்களுக்கு விருப்பத்தை, அன்பை கற்றுக் கொடுப்பது எளிதானதே. ஏனெனில் அன்பு என்பது இயற்கையாக மனிதனின் இதயத்தில் இருந்து மகிழ்ந்து வருவதாகும். இவர்கள் அனைவரும் ஒன்றினைந்து வாழ்வதையே நாங்கள் விரும்புகின்றேம். அப்படிப்பட்ட வாழ்க்கைமுறை நடைமுறைப்படுத்தப் படுவதற்காகவே இந்த தளம் செயல் படும் இன்ஷா அல்லாஹ். அதற்கு விலையாக (ஈமானை தவிர) எதையும் இலக்க தயார். அது எம் உயிராக இருந்தாலும் சரியே. அது ஒரு முறையல்ல பல முறை இறுந்தாலும் எம் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியே.

“இறைவா ! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும், நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.” (புகாரீ 2893)

நமது ஆசிரியர் குழு
நமதூர் செய்திகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக