Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 30 ஏப்ரல், 2014

பசுமை பூங்காக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்!

நகரப்புறங்களில் பசுமையான செடி கொடிகளும், தோட்டங்களும், பூங்காக்களும் அதிகம் இருந்தால் அதன் மூலம் அந்த நகரங்களில் வசிக்கும் மனிதர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என பிரிட்டன் ராயல் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸின் தலைவரான மருத்துவர் சர் ரிச்சர்ட் தாம்சன் கூறியுள்ளார்.
செடிகொடிகளால் மன அழுத்தம், கோபம் மற்றும் மன உளைச்சல் போன்றவை குறைகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் மரணத்துக்கு காரணமான நான்காவது பெரிய காரணியாக இருப்பது என்பது போதுமான உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது தான் என்றும், ஆகவே அதிக அளவில் நகர்ப்புறங்களில் தோட்டங்கள் அமைத்தால் அவற்றில் மனிதர்கள் உடற்பயிற்சி செய்யலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
லண்டனில் பசுமை நகரங்கள் தொடர்பாக நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கம் ஒன்றில் அவர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
பசுமையான தோட்டங்கள், பூங்காக்கள் போன்றவை நகரப்புறங்களில் இருந்தால் அவற்றால் ஏராளமான நன்மைகள் மனிதர்களுக்கு ஏற்படும் என பல்வேறு ஆராய்ச்சிகள் முன்பே தெரிவித்திருந்தாலும், இதற்கான முன்னெடுப்புக்கள் சுகாதாரத்துறை திட்டங்களுக்குள் சேர்க்கப்படுவதில் கவனம் செலுத்தப்படுவதில்லை என்றும் அவர் அந்த கருத்தரங்கில் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், மருத்துவமனைகளில் பசுமையான தோட்டங்களை அமைப்பதால், நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பணியாளர்கள் இடையே பெருமளவு மன அழுத்தம் குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தோட்டங்களில் விதவிதமான செடிகள் இருப்பது அவசியம். மேலும் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பசுமையான தோட்டங்களை பார்ப்பதால், அறுவை சிகிச்சைக்கு பின்னர் வரும் படபடப்பு போன்றவை குறைவதால், அவர்களுக்கு தேவைப்படும் மருந்தின் தேவையும் குறைவது கண்டறியப்பட்டுள்ளது.
அதே போன்று தோட்டத்தில் வேலை செய்வதால் உடல் இலகுவாகிறது, மேலும் தடுமாற்றம் இல்லாமல் நடக்க முடிகிறது, இதனால் தனியாக வீட்டில் இருக்கும் வயதானவர்கள் தடுமாறி வீட்டிற்குள் விழுந்து விடுவது குறைகிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், சூரிய ஒளி உடலில் பட்டால், அதனால் ரத்தக் கொதிப்பு குறைவது தெரிய வந்துள்ளது.
இவ்வளவு நன்மை உடைய பசுமை பூங்காக்களையும், தோட்டங்களையும் அமைத்தால் அது சுகாதாரத்துறைக்காக அரசு செலவிடும் தொகையில் ஏராளமான சேமிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சர் ரிச்சர்ட் தாம்சன் கருத்தரங்கில் கூறினார்.
நன்றி நியூஇந்தியாடிவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக