Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 4 டிசம்பர், 2012

நலத்திட்டங்களின் "சராசரி" செலவிலும் பாரபட்சம் : முஸ்லிம் ரூ.138/-, எஸ்.சி.ரூ.1280/-, எஸ்.டி.ரூ.1400/-.


நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரங்களின்படி, மத்திய அரசின் மூலம், ஹிந்து சமூகத்தினர் பெற்றுவரும் நன்மைகளில் "10 ல் 1 பங்கு" பலன்கள் கூட முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை, என்ற வேதனையான உண்மை தெரியவந்துள்ளது.
மஜ்லிஸ் கட்சியின் எம்.பி.யான அசதுத்தீன் உவைசி, மற்றும் கேரளாவை சேர்ந்த எம்.பி.க்கள் அனுராதன் சம்பத் மற்றும் பி.கே.பிஜூ ஆகியோர், சிறுபான்மை நலத்திட்டங்கள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு, மத்திய சிறுபான்மை நல இணையமைச்சர் "நைனாங் எரிங்" எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், திடுக்கிடும் பல தகவல்கள் தெரியவந்துள்ளது.

மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப ஒவ்வொவொரு சமூகத்துக்காகவும் சராசரியாக (ஆண்டுக்கு) நபர் ஒருவருக்கு அரசு செய்யும் செலவுகள் குறித்த அந்த விவரத்தில், ஹிந்து சமூகத்தின் பல பிரிவினருக்கு செய்யப்படும் செலவுகளை விட முஸ்லிம்களின் மீது செலவழிக்கப்படும் தொகை மிகவும் குறைவாக உள்ளது.
ஹிந்து சமூகத்தின் "எஸ்.சி" பிரிவினருக்கு அரசு செய்யும் செலவு ரூ.1280/-,  "எஸ்.டி"க்களுக்கு ரூ.1400/-
ஆனால், முஸ்லிம்களின் மீது செலவழிக்கப்படுவதோ வெறும் ரூ.138/-
அதிலும், பெரும் தொகை "கல்வி உதவி"யாக (ஸ்காலர்ஷிப்) கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 12ம் ஐந்தாண்டு திட்டத்தில் முஸ்லிம்களின் நலன்களுக்கான ஒதுக்கீட்டை அதிகப்படுத்தும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை, எனவும் கைவிரித்துள்ளது அரசு.
முன்னதாக, முஸ்லிம்களின் நலன்களுக்காக அரசு, பத்து மடங்கு கூடுதல் தொகை ஒதுக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி "திட்டக்கமிஷனுக்கு" பல கோரிக்கைகள் வைக்கப்பட்டும், "மாண்டேக் சிங் அலுவாலியா" அளித்த வாக்குறுதிகளுக்கு பிறகும், முஸ்லிம்களுக்கான திட்ட ஒதுக்கீட்டை அதிகரிக்காதது, கவலையளிப்பதாக உள்ளது.
மத்திய அரசு, முஸ்லிம் சமூகத்துக்காக பல நன்மைகளை செய்து வருவதாக "தம்பட்டம்" அடித்து வருவது "ஏமாற்று வேலை" என்பதும் புலப்பட்டு விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக