Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 4 டிசம்பர், 2012

அப்பாவிகளின் விடுதலைக்கு அணிதிரண்ட எம்பிக்கள் : 40 நிமிட சந்திப்பில் பிரதமரிடம் சரமாரி கேள்வி!


 இந்தியாவில், "இந்தியன் முஜாஹிதீன்" அலுவலகம் எங்கே இருக்கிறது? அதன் நிர்வாகிகள் யார் யார்? என்று சொல்ல முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகளால் பிரதமரை துளைத்தெடுத்தனர், எம்.பி.க்கள்.
அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும் - கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவும் - பல ஆண்டுகள் சிறையில் கழித்தபின் நிரபராதிகள் என விடுவிக்கப்படுபவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கிடவும் - பொய் வழக்குகளில் சிக்க வைக்கும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட விஷயங்களுடன் 16 எம்பிக்களின் குழு நேற்று பிரதமரை சந்தித்தது.

ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் சென்ற குழு 2 பக்கங்களை மட்டுமே கொண்ட மனுவை கொடுத்துவிட்டு, தீவிர விவாதத்தில் ஈடுபட்டனர்.
 ராம்விலாஸ் பாஸ்வான் :
2 வருடங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், அப்பாவிகள் விடுவிக்கப்பட்டு, வழக்கில் சிக்கவைத்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என அளித்த உத்தரவாதம் என்ன ஆனது?
ஒரு நேரத்தை "கெடு"வாக நிர்ணயித்து அதற்குள் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றார்.
 பிரதமர் மன்மோகன்சிங் :
இம்முறை, இந்த விஷயத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பாமல், நானே - நேரடியாக கவனிக்கிறேன் என்றார்.
மேலும், எதிர்காலத்தில் அப்பாவிகள் கைது செய்யப்படாமல் தடுக்கவும் - கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு - நிரபராதிகளின் மறுவாழ்வு - தவறான அதிகாரிகள் மீது நடவடிக்கை போன்றவைகளுக்கு வலுவான "மெக்கானிசம்" தயாரிக்கப்படும் என்றார்,பிரதமர்.
 ராம்கோபால் யாதவ் :
உத்தரபிரதேச அரசு, அப்பாவிகளை விடுதலை செய்ய முயன்றால், இன்று இவர்களை விடுதலை செய்யும் நீங்கள், நாளை இவர்களுக்கு "பத்மபூஷன்" விருது கொடுப்பீர்கள், என "நீதிபதிகள் கமென்ட் அடித்து" அப்பாவிகளை விடுவிக்க மறுத்த செயலை சுட்டிக்காட்டினார்.
 முஹம்மத் அதீப் :
முஸ்லிம்களை தீவிரவாத இயக்கங்களின் பெயர்களோடு தொடர்பு படுத்துவது, முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச சதி, இந்த சதிவலையில் இந்தியா விழுந்து விடக்கூடாது, என்றார்.
 மணிசங்கர் அய்யர் :
அப்பாவிகளை பொய் வழக்குகளில் சிக்கவைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் என்றார்.
பா.ஜ.க.வைத்தவிர, அனைத்துக்கட்சிகளின் எம்பிக்களும் இணைந்து சென்று முஸ்லிம்களுக்கு குரல் கொடுத்ததது, குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக