Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 22 டிசம்பர், 2012

பெரம்பலூரில் இன்று தமுமுக நடத்திய “ஒற்றுமையை நோக்கி” மாபெரும் கருத்தரங்கம்!


பெரம்பலூரில் இன்று சனிக்கிழமை (22.12.2012) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக ஒற்றுமையை நோக்கிஜமாத்தார்கள் சந்திப்பு நிகழ்ச்சி காலை 10.00 மணியளவில் நிஸ்வான் மகாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்புவிருந்தினராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் J.S.ரிப்பாயி அவர்களும் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த தலைவருமான M.H.ஜவாஹிருல்லாஹ்  ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.
இதில் நமதூரில் இருந்து மேற்கு ஜமாத் இமாம்கள் மற்றும் தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து நிர்வாகிகள் இமாம்களும் கலந்து கொண்டனர்.கிழக்கு ஜமாத்தில் இருந்து மர்கஸிலிருந்தும் யாரும் கலந்து கொள்ள வில்லை.சுமார் 200 நபர்கள் இதில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.மதியம் உணவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.






மின்னஞ்சல் மூலமாக 
M.சுல்தான் மொய்தீன்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக