Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 6 டிசம்பர், 2012

நமதூர் மற்றும் மாவட்ட முழுவதும் இன்று கண்காணிப்பு மையம்...


 இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க 6 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. 28 இடங்களில் கண்காணிப்பு மையமும், 7 வாகனங்களில் ரோந்து செய்யப்படுகிறது. 

இதுபற்றி பெரம்பலூர் எஸ்பி ராஜசேகரன் தெரிவித்திருப்பதாவது:
டிசம்பர் 6ம் தேதி பாபர்மசூதி இடிப்பு தினம் என்ப தால் அன்றைய தினம் மாவட்ட அளவில் எங்கும் அசம்பாவிதம் நிகழாமல் தடுப்பதற்காக
திருமாந்து றை, ஊட்டத்தூர் பிரிவு ரோடு, கோனேரிப்பாளையம், உடும்பியம், மருதையான்கோயில், அகரம்சீகூர் ஆகிய 6 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து 20 போலீசாரை கொண்டு வாகன தணிக்கை நடத்தப்படவுள்ளது. 
வி.களத்தூர் பள்ளிவா சல், லப்பைக்குடிகாடு பள்ளிவாசல்கள், விசுவக் குடி பள்ளிவாசல் மற்றும் முக்கிய இந்து கோயில்கள், முக்கிய சாலை சந்திப்புகள் என 28 இடங்களில் போலீ சார் மற்றும் ஊர்க்காவல் படையினர் 56 பேர்களை கொண்ட கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் 4 ரோடு பகுதியிலிருந்து தொ ழுதூர் வரை, பாடாலூர் வரை, அரியலூர் வரை, உடும்பியம் வரை, பெரம்பலூர் நகரம் முழு வதும், பெரம்பலூரிலிருந்து அடைக்கம்பட்டி வரை, மருதையான்கோயிலில் இருந்து அகரம்சீகூர் வரை என 7 வழித்தடங்களில் மூவிங் பேட்ரோல் எனப்ப டும் ரோந்து வாகன கண்காணிப்பு நடத்தப்படுகிறது.
மேலும் புதுபஸ் ஸ்டாண்டு, பழைய பஸ்ஸ் டாண்டு மற்றும் சந்தேகிக்கப்படும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர் கள், வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அதனை செயலிழக்கும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவற்றோடு 4 ரோடு துணை மின் நிலையம், எறையூர், உடும்பியம் சர்க் கரை ஆலைகள், ஜேபிஆர் சிமென்ட் ஆலை, எம்ஆர்எப்டயர் தொழிற் சாலை ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமலிருக்க  220 பேர் பாது காப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

நன்றி தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக