Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 15 அக்டோபர், 2012

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள இரு சக்கர வாகன ஓட்டிகள் வரும் 22ம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்



பெரம்பலூர் மாவட்டத்தில் இரு 
சக்கர வாகன ஓட்டிகள் வரும் 
22ம் தேதி முதல் கட்டாயம் 
ஹெல்மெட் அணிய வேண்டும் 
என்று எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

பெரம்பலூர் எஸ்பி ராஜசேகரன் 
நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:


மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை 
குறைத்து விபத்துக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் 
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரு சக்கர வாகன விபத்துக்களில் 
பலருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக அளவில் உயிரிழப்பு
 ஏற்பட்டு வருகிறது.

நேற்று ஒரு நாள் மாவட்டம் முழுவதும் கால்துறையினர் திடீர் வாகன 
தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் குடிபோதையில் வாகனம் ஒட்டிய 
8 பேர், அதிக வேகத்தில் வந்த ஒருவர், முகப்பு விளக்கில் அதிக ஒளியுடன் 
கூடிய பல்பு பொருத்தி இருந்த 79 வாகனங்கள், முகப்பு விளக்கு 
இல்லாத 12 வாகனங்கள், ஹெல்மெட் அணியாமல் வந்த 12 பேர், 
சீருடை அணியாமல் வந்த 14 பேர், பர்மிட் இல்லாத வாகனம் ஓட்டிய 
15 பேர், இதர பிரிவுகளில் 52 பேர் என மொத்தம் 250 பேர் மீது 
வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனத்தை 
இயக்க வேண்டும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் விபத்துக்களை 
தடுத்து உயிரிழப்புகளை தவிர்க்கும் பொருட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் 
அனை வரும் வரும் 22ம் தேதி முதல் ஹெல்மெட் அணி வது 
கட்டாயமாக்கப்பட உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு அனைத்து 
இரு சக்கர வாகன ஓட்டிகளும் கட் டாயம் ஹெல்மெட் அணிய 
வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன 
ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து, உடனடியாக அபராதம் 
வசூலிக்கப்படுவதோடு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு எஸ்பி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக