Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 23 அக்டோபர், 2012

டெங்கு காய்ச்சல் : சில தகவல்கள்


உலகின் பல நாடுகளில் 200 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயே டெங்கு காய்ச்சல். கடந்த 30 ஆண்டுகளில் இதன் தாக்குதல் (EPIDEMICS) அதிகரித்துள்ளது. உலகம் முழுதும் சுமார் 2500 மில்லியன் மக்கள் டெங்கு கொள்ளை காய்ச்சலின் பாதிப்பு வளையத்திற்குள் வாழுகின்றனர். ஆண்டுக்கு 50 மில்லியன் மக்களை டெங்கு தாக்குகிறது.
டெங்கு காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது?
டெங்கு 1, 2, 3, 4 என 4 வகை வைரஸ்களால் ஏற்படும் காய்ச்சல் இது. எடியஸ் எஜிப்டிவகைக் கொசுக்களால் இது பரவுகிறது. கொசு கடித்த 5, 6 நாட்களில் காய்ச்சல் வருகிறது.

இக்கொசுக்கள் தேங்கியுள்ள மழைநீரில், நன்னீரில் இனப்பெருக்கம் செய்யும். சூரிய உதயத்திலிருந்தது 2 மணி நேரமும் சூரியன் மறையும் மாலையில் 2 மணி நேரமும் இவை கடிக்கும்.
தண்ணீர் தேங்க விடாதீர்கள்!
முன்பெல்லாம் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெருகிய ஏடியஸ் கொசுக்கள் இப்போது கோடை மழைக் 

காலச் சூழலிலும் பெருகி வருகின்றன.
ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் தண்ணீர் தேங்காமல் தடுப்பது அவசியம். ஜக்குகள், வாளிகள், பூந்தொட்டிகள், நீர்த் தொட்டிகள், பாட்டில்கள், டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பானைகள் போன்றவற்றைச் சுத்தப்படுத்துவதும், வெயிலில் காய வைத்து பயன்படுத்துவதும் அவசியம். குளிர்சாதன பெட்டியை (பிரிட்ஜ்) வாரம் ஒரு முறையேனும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
நோய் தொற்றிய பின் காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது?
நோய்க்கிருமி தொற்றியதும் அவை நிணநீர் நாளங்களில் பெருக்கம் அடையும். 4 முதல் 6 நாட்களில் அறிகுறிகளை உண்டாக்கும்.

டெங்கு காய்ச்சல்அறிகுறிகள் என்ன?
1. டெங்கு காய்ச்சல் ( Dengue Fever -DF)
2. டெங்கு ரத்தக் கசிவு காய்ச்சல் (Dengue Hemorrhagic Fever -DHF)
3. டெங்கு தீவிர தாக்குதல் நிலை (Dengue Shock Syndrome)
இவ்வாறு டெங்கு காய்ச்சலில் 3 நிலைகள் ஏற்பட்டு மரணங்களும் ஏற்படுகின்றன.
DF: கடுமையான ள1030 – 1050 ஊன காய்ச்சல், கடும் தலைவலி, கண்களுக்கு பின்னால்
கடும் வலி (Retro Orbital Pain), தசைவலி, எலும்பு & மூட்டுவலி, கடும் வாந்தி, தோலில் சிவந்த சினைப்புகள் (Rash)

DHF: கடும் காய்ச்சல், தோலில் சிவப்பு, ஊதா நிறப் புள்ளிகள், வாய் உட்பகுதி,
மூக்கு, குடற்பகுதியில ரத்தக் கசிவு, ரத்த வாந்தி, ரத்த மலம்.

(3) DSS: நோய் உக்கிரமடைந்து ரத்த சுழற்சி செயலிழந்து விடும். இந்நிலை ஏற்பட்டு
12 – 24 மணி நேரங்களில் நோயாளி மரணமடைந்து விடுவார்.
டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த சோதனைகள் உள்ளதா?
நேரிடையாக (அ) மறைமுகமாக டெங்கு காய்ச்சலை ஆய்வுக் கூடங்களில் உறுதிப்படுத்த முடியும்.
நோயின் ஒரு கட்டத்தில் டெங்கு வைரஸ்கள் மனித ரத்தத்திலுள்ள தட்டையணுக்களை (PLATELETS) அழிக்கும். எனவே வாய், மூக்கு என உடலின் பல பாகங்களில் ரத்தக் கசிவு நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படும். இந்நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் மருத்துவமனைகளில் (Fresh Blood Transfusion (அ) Platelets Rich Plasma) ரத்தம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.
டெங்கு சுரத்திற்கு தடுப்பு மருந்துகள் உள்ளனவா?
ஆங்கில மருத்துவத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை!
சித்த, ஆயுர்வேத மருந்துகள் பயனளிக்கின்றன.
நிலவேம்பு கசாயம் தினம் காலை / மாலை 30 மிலி வெறும் வயிற்றில் 3 வாரம் தொடர்ந்து பருகினால் டெங்கு உள்ளிட்ட வைரஸôல் பரவும் காய்ச்சலை தடுக்க முடியும்.
ஆயுர்வேதத்தில் அம்ருதாரிஷ்டம் (Amrutha Aristitam) 25 மிலி மருந்து சமஅளவு வெந்நீருடன் கலந்து காலை, மாலை பருகினால் டெங்குவை தடுக்க முடியும்.
சித்த மருந்துகளில் பிரமானந்த பைரவம், வாதசுர குடிநீர் போன்றவை டெங்கு காய்ச்சலைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகின்றன.
ரத்தத் தட்டணுக்கள் ( PLATELETS) குறையாமல் காக்கவும், அதனை வேகமாக அதிகரிக்கச் செய்யவும் ஆடாதோடை மூலிகை (ஆரம்ப நிலை தட்டணு குறைவு உள்ளபோது – 1 லட்சம் To 11/2 லட்சம் அளவுக்குள் இருக்கும்போது) சாற்றினை சற்று சூடாக்கி தினம் 10 மி.லி. வீதம் 1 வாரம் சாப்பிட்டால் Platelets அதிகரிப்பதைக் கண்கூடாக காணலாம். (ஆடாதோடை பச்சை இலை கிடைக்காவிட்டால்…. பொடியாக, மாத்திரையாக கிடைத்தாலும் பயன் படுத்தலாம்)
(குறிப்பு : Platelets எண்ணிக்கை மிகவும் குறைந்தால் ரத்தம் செலுத்துவது மிகவும் அவசியம்; நல்லது.)

டெங்குவைஅடங்கச் செய்ய ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளனவா?
உலகப்புகழ் பெற்ற சுமார் 25 ஹோமியோபதி மருந்துகள் வரலாறு நெடுகிலும் டெங்கு, சிக்கன் குனியா, பன்றிக் காய்ச்சல், பறவை காய்ச்சல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக பயன்பட்டுள்ளன.
1996-ல் டெல்லியில் டெங்கு பேரளவில் தாக்கிய போது அரசின் உத்தரவுக்கிணங்க, டெல்லி மாநில ஹோமியோபதி கவுன்சில் ‘Eupatorium Perf ’ என்ற ஹோமியோபதி மாத்திரையை பல்லாயிரம் பொதுமக்களுக்கு தடுப்பு மருந்தாக வழங்கி முழுவீச்சில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தினார்கள். மேலும் டெங்கு காய்ச்சல், ரத்த கசிவு டெங்கு காய்ச்சல் இரண்டையும் (ஆங்கில மருத்துவத்தில் உரிய மருந்துகள் இல்லாத நிலையில்) ஆற்றல்மிக்க 25 ஹோமியோபதி மருந்துகள் மூலம் குணப்படுத்திக் காட்டினர்.
ஆதாரம் :http:/www.delhihomeo.com/php/treatment/dengu-pre.htm.
பொதுமக்களே! அச்சம் வேண்டாம்!
பெருவாரி நோய்கள் பரவும் காலங்களில் நம் உடலின் தற்காப்புத் திறனை மேம்படுத்திக் கொண்டு நோய் வராமல் தடுக்கவும், நோயின் ஆரம்ப நிலையிலேயே பக்கவிளைவு இல்லாமல் முழுமையாக குணப்படுத்தவும் வாய்ப்புள்ள ஹோமி யோபதி, சித்தா, ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்துங்கள்.
எளிய கிருமிகளால் மனித உயிர்கள் அழிவது மாபெரும் வீழ்ச்சி! அறியாமை! மனிதன் மகத்தானவன்! மனித உயிர் விலை மதிப்பற்றது! மனித உயிருக்கு அரணாய் திகழும் மாற்று மருத்துவங்கள் இருக்க .. வீண் பயமும் பீதியும் எதற்கு? டெங்கு சுரத்தை முறியடிப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக