Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 29 அக்டோபர், 2012

உங்கள் நிலை என்ன? தெர்யுமா?

கனிமொழிக்கு ஏற்பட்டதுபோல் உங்களுக்கு ஏற்பட்டால்! உங்கள் நிலை என்ன?

நமதூரில் பேருந்து நிலையம் அருகில் திமுக சார்பாக தற்காலிகமாக ஒரு புதிய விளம்பரப்பலகை அமைத்துள்ளனர். இதில் நமதூரில் இருந்து ரசூல் அஹமது என்பவரை, பெரம்பலூர் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டமைக்கு திமுக விற்கு நன்றி பாராட்டும் வகையில் இதை வைத்துள்ளனர்.
ஒன்றை மட்டும் நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள்! நீங்கள் எவ்வளவுதான்
சமுதாயத்திற்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைத்தாலும், அது மாற்று வழியில் கையாண்டால், நாளைய இஸ்லாமியர்கள் உங்களை தூக்கிஎரிந்துவிடுவார்கள். நீங்கள் கட்சி மூலமாக எது செய்தாலும் அதற்க்கு முன் உங்கள் தலைவரை அணுகுவீர்கள். அவனுடைய சிந்தனை நாளைய இஸ்லாமியர்களின் வீழ்சியை நோக்கியே இருக்கும். காரணம் நாம் ஒன்றாக எழுந்தால் என்ன நிலை உருவாகும் என்று உங்களுக்கு தெரிமோ, தெரியாதோ? ஆனால் உங்கள் தலைவருக்கு நிச்சயம் தெரியும்!
தமிழகத்தில் மது என்று ஒன்று இல்லாமல் இருந்தது. இவன்தான் இறக்குமதி செய்து WINE SHOP என்ற பெயரில் வெளிவிட்டான். அன்று முதல் இன்று வரை இஸ்லாம் அல்லாத கட்சிகாரர்கள் சுமார் 85 % மேல் குடிகாரர்களாக உள்ளனர்.
இவனுடைய மகளுக்கு நேர்ந்தது போல் உங்களுக்கோ! அல்லது உங்களில்  ஒரு கட்சி தொண்டருக்கோ நிகழுமேயானால்? நிச்சயமாக கூறுகிறோம். உங்கள் கட்சியில் இருந்து ஒருவன் கூட உங்களுக்காக நீதிமன்றத்தை அணுகமாட்டார்கள்.
திமுக ஆட்சியில் இதுவரை எந்த சட்டமும் போடாமல் நீதிமன்ற காவலில் வைத்திருக்கும் இஸ்லாமியர்களின் கண்ணீர் உங்களை சாபம் விடும் முன் நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கட்சி இஸ்லாமியர்களுக்கு எதிராக தவறு செய்தால் அதை எதிர்க்கும் வலுவும், திராணியும் உங்களிடம் இல்லாமல் ஆக்குவதே அவர்களுடைய சாணக்கியத்தனம் என்பதை எப்போது நீங்கள் உணருகின்றீர்களோ! அப்பொழுதுதான் நம் சமுதாயத்திற்கு ஒரு மறுமலர்ச்சி உருவாகும்.
அண்ணா பிறந்த நாள் அன்று பலர்விடுதலை! இதில் நம் சகோதரர்கள் யாரும் இல்லை! எங்களுக்கு தெரிந்த ஒன்றுதான். ஆனால் இஸ்லாமிய சிந்தனையை மிஞ்சும் அளவிற்கு கட்சி வெறி பிடித்தவர்களுக்கு இது விளங்காமல் தான் இருக்கும். உங்களுக்கு 20 ஆண்டுகள் கொடுத்ததும் உங்களால் அப்பாவி முஸ்லிமை ஒருவரை கூட வெளியே கொண்டு வரமுடியவில்லை! இனி இவர்கள் வெளியே வந்தாலும் கூட, அதற்கும் உங்களுக்கும் எந்தசம்மந்தமும் இல்லை! காலம் தான் இவர்களை வெளியே கொண்டுவந்தது என்று எம்போன்றோர்களால் உணரமுடியும்.
நமது நிருபர் 

2 கருத்துகள்: