Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

அப்ரண்டீஸ் பயிற்சிக்கு அழைப்பு



எம்.ஆர்.எஃப்., டயர் தொழிற்சாலை அப்ரண்டீஸ் பயிற்சிக்கு அழைப்பு (Dinamalam)

பெரம்பலூர்: "எம்.ஆர்.எஃப்., டயர் தொழிற்சாலையில் தொழில் பழகுனராக பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்' என, பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:எம்.ஆர்.எப்., டயர் தொழிற்சாலையில் தொழில் பழகுனராக பயிற்சி பெற விரும்பும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், தங்களது பெயரை பதிவு செய்ய, கலெக்டர் அலுவலகத்தில், புது வாழ்வு திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி அக்., 9ம் தேதி முதல், அக்., 17ம் தேதி வரை, காலை, 10.30 முதல், மாலை, 4 மணி வரை, பெயர் பதிவு நடக்கிறது. பதிவு செய்ய கல்வித்தகுதி, ஜாதி சான்றிதழ், இருப்பிடச்சான்று மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். தகுதியான நபர்களுக்கு அக்., 20ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது.தொழில் பழகுனராக தேர்வு பெறும் நபர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு உதவித்தொகையாக, 1,000 ரூபாய் மற்றும் இலவச பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். பயிற்சி முடிவு பெற்றதும், எம்.ஆர்.எப்., நிறுவனத்தில் பழகுனராக மூன்றாண்டுகள் தொடரலாம். அதன் பின் தகுதி அடிப்படையில் பணியாளராக சேர்த்துக்கொள்ளப்படுவர்.பயிற்சிக்கு, 18 முதல், 25 வயது வரை, உள்ள ஆண்கள், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி மற்றும் ப்ளஸ் 2 தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள் மற்றும், ஓராண்டு ஐ.டி.ஐ., படிப்பு, பட்டயப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சமாக, ஐந்தடி, ஆறு அங்குலம் உயரமும், 50 கிலோ எடை இருக்க வேண்டும். தொழில் பழகுனர் பயிற்சி காலம், மூன்றாண்டுகள் ஆகும்.பயிற்சி காலத்தில் உதவித் தொகையாக, முதல் ஆண்டில் மாதம், 5,460 ரூபாய் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 94450-43119 என்ற மொபைலில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக