Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

லப்பைகுடிக்காடா? லப்பை (மது) க்காடா?


அன்புள்ள லப்பைகுடிகாட்டு மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!
நமதூரில் சில வருடங்களாக சில இளைங்கர்களிடம் குடிப்பழக்கம் அதிகரித்து அதற்க்கு அடிமையாகி வரும் நிலை நமதூரில் பரவலாக வருகிறது. இதற்க்கு ஊக்குவிக்கும் விதமாக சில அரசியல் கட்சிகளும் பார்ட்டி என்ற பெயரில் சில இளைகர்களை குடிபோதைக்கு ஆளாக்கி அவர்களை கெடுத்து வருவது தாங்கள் அறிந்ததே!

இன்று நமதூரிலே பெண்கள் மேல்நிலை பள்ளி அருகில் உள்ள ஒரு சிறிய

உணவகத்தில் சுமார் 15 வயதுதக்க இளைஞன் போய் மதுவேண்டும் என்று கேட்டாலும் அதை கொடுப்பதற்கு அவர்கள் தயங்குவதில்லை.  இன்று நமதூர் பேருந்துநிலையம் அருகிலே! வெளியூர் காரனும் வெளிப்படையாக இருவுநேரத்திலே மதுகுடிக்கிறான் இதை பேருந்து நிலையத்தில் கடை வைத்திருப்பவர்களே மறுக்கமுடியாதுஏன் இந்த நிலை?  ஜமாத்தார்கள் ஆதரவோடு வெற்றிபெற்ற நமது பேரூராட்சி து. தலைவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்.?

நாம் சாதரணமாக இஸ்லாத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை, மாறாக பலர் தியாம் செய்து, அதில் பல இன்னல்களை நம்முன்னோர்கள் கடந்து, சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு இருந்த நம்மை விடுவிக்க ஒரு தூய்மையான மார்கத்தை தேடி திரியும் பொழுதுதான் நம்மிடம் இஸ்லாம் கிடைத்து அதை நாம் பெற்றுகொண்டோம்
இதனால் இவர்கள் தங்களையும் கெடுத்து, நமதூரின் பெயரையும் நாசம் செய்துகொண்டிருக்கின்றனர். இனிவரும் காலங்களில் இவர்கள் திருந்தவில்லை என்றால், திருத்தபடுவார்கள் (இன்ஷா அல்லாஹ்)
இறைவன் எச்சரிக்கை செய்கிறான்:
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எரிந்து குறி கேட்பதும், சைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
நிச்சயமாக சைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைகொண்டும், சூதாட்டத்தை கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும், உண்டுபண்ணி அல்லாஹ்வின் நினைவில் இருந்தும், தொழுகையில் இருந்தும், உங்களைத் தடுத்து விட்டான். எனவே அவற்றைவிட்டும் நீங்கள் விலகிக்கொள்ள மாட்டீர்களா?
திருக்குர்ஆன்:5:90,91
நமதுநிருபர்.

2 கருத்துகள்:

  1. நமதூர் ஜமாதர்கள் சரி இல்லை. இந்த விசையதை அவர்கள் தான் கவனிக வேண்டும்....

    பதிலளிநீக்கு