Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 11 அக்டோபர், 2012

நமதூரில் மின்வாரியம் முற்றுக்கை போராட்டம்.


நமதூரில் மின்வாரியம் முற்றுக்கை போராட்டம்.

வரலாறு காணாத மின்வெட்டை மற்றும்  சில கோரிக்கைகளையும் வலியுறுத்தி நமதூரில் மின்வாரியம் முற்றுக்கை போராட்டம் நடந்தது. இதில் சுமார் 50 போ் கலந்துக்கொண்டனர்.
இது போக ஊர் பொதுமக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சில இளைஞர்கள்  தெரு தெருவாக சென்று போராட்டதிற்கு அழைப்பு விடுத்து வந்தனர். இதை காவல்துறைக்கு சிலர் தெரியப்படுத்தினர். பின்பு காவல் துறை வந்திரங்கியது. போராட்டகாரர்களை அப்புரவு படுத்த முயன்ற காவல்துறை, இவர்கள் மறுக்கவே பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகள்.
மின்சாரம் இதுபோலதான் இருக்கும் என்று நிருபணமானது.
மினசாரம் இயங்கும் நேரத்தை அட்டவனை கெடுப்பது.
மின் அளவீட்டை குறித்த பிறகு கால அவகாசம் தேவை என்பதை பேசப்பட்டது.
நமதூரில் நலவான திட்டம் எதுவும் ஆளும் கட்சி செயல் படுத்தாமல் ஒருதலை பட்சமாக செயல் படும் இந்த தருணத்தல், எதிர் கட்சியில் இருப்பவர்கள் கூட இதில் கலந்துக்கொள்ளாமல் புறக்கனித்தது அரசியல் கட்சியை நம்பியிருப்பவர்கள் மத்தியில் மிகுந்த மண வருத்தத்தை உருவாக்கியுள்ளது. இதில் ஒருவர் கூறுகையில் இனி எந்த முகத்தைக்கொண்டு ஓட்டு கேட்க வருவார்கள் என்பதை பார்ப்போம் என்றார்.
இதில் வழக்கம் போல் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் தன்னுடைய வயிறு நொம்பினால் போதும் என்று சமுதாயப்பணி செய்பவர்களை ஏலனம் செய்துக்கொண்டுள்ளார்கள்.

களத்தில் இருந்து  நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக