Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 12 அக்டோபர், 2012

தொடர்கிறது தமிழக முஸ்லிம்களின் ஒற்றுமை! சிறை வாசிகளுக்காக ஒன்றினையும் இயக்கங்கள்!



பொதுவான பிரச்சனைகளில் இந்த சமுதாயம் ஒன்றிணையாதா? என ஏங்கிக் கொண்டிருந்த மக்களின் மனக் குறைகளை போக்கும்  விதமாகவும்  சத்தியத்தில் உறுதி சமுகத்தில் நல்லிணக்கம் எனும்  இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கை முழக்கத்தை  நடைமுறைப் படுத்தும் விதமாகவும்,
முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம்
  கட்டாய திருமண சட்டம், காதியானிகள் பிரச்னை, திருமண வயது பிரச்னை, போன்ற பிரச்சனைகளில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றிணைந்து களம் கண் டன! [ TNTJ தவிர ] எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல் நபிகளாரை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக  முன்னேப்போதும் இல்லாத எழுச்சியோடு ஒன்றிணைந்து தமிழகம் முழுவதும் களம் கண்டதைக் கண்டு ஆளும் வர்க்கம் அதிர்ந்து போய் இந்த ஒற்றுமையைக்  குலைக்க மீண்டும் முஸ்லிம்களை தீவிரவாதியாக காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் முன்னோட்டம் தான் அப்பாவி அதிரை அன்சாரியை தீவிரவாதியாக காட்டியது!

ஆனால் நீ பிரிக்க நினைத்தால் எங்களை முடக்க நினைத்தால் உத்வேகமாக எழுவோம் என்பதை உணர்த்தும் வண்ணம் இரண்டு நாட்களுக்கு முன்னாள் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து முக்கியமான முடிவை எடுத்துள்ளனர். அண்ணா  பிறந்த நாளில் அரசு விடுதலை செய்யாத  முஸ்லிம் சிறைவாசிகளை மீட்டு எடுக்க உச்ச நீதி மன்றத்தில் உள்ள   வழக்கை விரைந்து நடத்தி முடிக்க ராஜீவ் தவான் போன்ற பிரபலமான் வழக்கறிஞர்களை  வைத்து நடத்துவது என்றும் அதற்காக வரும் ஜூம்மாவில் அறிவிப்பு செய்து தமிழகம் முழுதும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் போதிய நிதியை திரட்டி இதை திறம்பட செய்து சிறைவாசிகளின் குடுபங்களில் நிம்மதியை ஏற்படுத்துவது எனவும் ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.அளஹ்ம்து லில்லாஹ்

சென்னை    வட பழனி பள்ளிவாசலில் நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் துணைத்தலைவர் முனீர், தமுமுகவின் அப்துல் சமத் , எஸ்.டி.பி.ஐ தலைவர் தெஹ்லான் பாக்கவி , ஜமாத்துல் உலாமா உள்ளிட்ட முஸ்லிம் இயக்க கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் இந்த அமைப்புகளின் மாவட்ட பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.   இன்ஷா அல்லா இந்த முயற்சி வெற்றி பெற அனைவரும் ஒத்துழைப்பையும் பிரார்த்தனைகளையும் செய்வோமாக!


நன்றி INTJ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக