Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 18 ஆகஸ்ட், 2012

முஸ்லிம் உலகம் குதுஸ் தினத்தை கடைப்பிடித்தது!


Thousands of Palestinians prevented from attending the last Friday
டெஹ்ரான்:ஃபலஸ்தீன் மக்களின் சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவையும், ஒற்றுமை உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் முஸ்லிம் உலகம் சர்வதேச குத்ஸ் தினத்தை நேற்று(ரமலானின் கடைசி வெள்ளிக்கிழமை) கடைப்பிடித்தது.
இஸ்ரேல் சியோனிச அரசுக்கு எதிரான கோபம் கொந்தளித்த பேரணிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
ஃபலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக பல்வேறு நாடுகளில் உள்ள மஸ்ஜிதுகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
ஈரானில் 550க்கும் மேற்பட்ட நகரங்களில் பேரணிகள் நடந்தன. இஸ்ரேல் அரசை துடைத்தெறிந்து உலகத்தின் பல்வேறு பகுதிகளில் அகதிகளாக வாழும் ஃபலஸ்தீன் மண்ணின் மைந்தர்களை சொந்த மண்ணில் குடியமர்த்துவது  மட்டுமே பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்ற ஈரான் அரசின் அறிக்கையை வாசித்துவிட்டு பேரணிகள் நிறைவடைந்தன.

இஸ்ரேல் என்ற முளையை பூவுலகில் இருந்து துடைத்தெறிய அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் குத்ஸ் தினச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.  இஸ்ரேலின் இருப்பு மனித சமூகத்திற்கு அவமானம் என்று அவர் கூறினார்.
பாகிஸ்தானில் நடந்த பேரணியில் குண்டுவெடித்ததில் ஒருவர் பலியானார். 13 பேருக்கு காயம் ஏற்பட்டது. பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியாவிலும் பேரணிகள் நடந்தன. ஃபலஸ்தீன் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவையும், ஒற்றுமை உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் 1979-ஆம் ஆண்டு இமாம் கொமைனி ரமலான் கடைசி வெள்ளிக்கிழமையை குத்ஸ் நினைவு தினமாக அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக