Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

கபரஸ்தானில் குழி வெட்டுபவர் இன்று மரணமடைந்தார்கள்.

நமதூர் கிழக்கு பள்ளிவாசலிலுள்ள கபரஸ்தானில் குழி வெட்டுபவர் முஹம்மது இபுராஹீம் அவர்கள் இன்று மரணமடைந்தார்கள்.

உழைப்பால் உயர்ந்தவர்கள் பலர் உண்டு, அதுபோல் உழைப்பால் வாழ்ந்தவர்களும் பலர் உண்டு. இதில் இரண்டாம் வகையில் வாழ்ந்தவர்தான் நமதூர் கிழக்கு பள்ளிவாசலிலுள்ள கபரஸ்தானில் குழி வெட்டுபவரான முஹம்மது இபுராஹீம் அவர்கள்.

திங்கள் கிழமையான இன்று கிழக்கு மட்டும் மேற்கு பள்ளிவாசலில் திருமணம் நடந்தது. இதில் இபுராஹீம் அவர்கள் வழிமா விருந்தினை உணவு சாப்பிட்டு விட்டு வெளியே வந்துடன் எதிர்பாரதவிதமாக மயக்கநிலை அடைந்தார். பின்பு அவர்களை சோதித்து பார்க்கும் போது மரணமடைந்தார்கள் என்று தெரியவந்தது.
இவருக்கு மனைவியும் குழந்தைகளும் தற்போது இல்லை. இவருடைய வாழ்க்கை இவரே யாருடைய உதவியும் இல்லாமல் நடத்திவந்தார். இவருக்கு வருமானம் எனபது கபரஸ்தானில் குழி வெட்டுவதன்  மூலம் கிடைக்கும் வருமானம் தான். போதாத காலங்களிலும் யாருடைய உதவியையும் எதிர்பாராமல் அவரே அவருடைய வாழ்க்கையை நடத்தி, இறைவனால் முடித்து வைக்கப்பட்டது பொதுமக்களிடையே கண்கலங்க வைத்துள்ளது.
இவருக்காக துவா செய்த வண்ணமாக " இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் "
நீங்கள் என்கிருந்தபோதும் உங்களை மரணம் சுவைத்தே தீரும், அதில் நீங்கள் உறுதியாக கட்டப்பட்ட கோட்டையில் இருந்தாலும் சரியே (திருக்குர்ஆன்)
நமது நிருபர்.

2 கருத்துகள்:

  1. "இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்" யா "அல்லாஹ்" அண்ணார் அவர்கள் இம்மையில் செய்த சிறிய பெரிய பாவங்களை மன்னித்து, அவருடைய கப்ரை பிரகாசிக்கசெய்து, உன்னுடைய அழகிய சுவர்க்கபூங்காவில் நல்லடியார்களுடன் அமரச்செய்வாயாக, என்று துஆ செய்கின்றேன். அவர்பிரிவால் வாடும் அக்குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவர்களுக்கும், இறைவன் சாந்தியும், சமாதானமும், தந்தருள, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  2. அன்னவர் வெட்டிய கபர் குழியிலேயே அன்னவர் அடக்கம் செய்தாக அறிகின்றேன். இது உண்மையா விபரம் தாருங்கள்.

    பதிலளிநீக்கு