Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசலில்


நமதூர் தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசலில் நடத்தப்பட்ட இன்றைய (31-08-12) ஜும்ஆ தொழுகைக்கு ஆண்களும்,பெண்களும் பெரும் திறளாக வந்திருந்து பயன் பெற்றார்கள்.வளமையான முறையில் பெண்கள் பள்ளியின் கீழ்தளத்திலும் ஆண்கள் மேல்தளத்திலும் தொழுதார்கள்இது திருமண காலமாக இருப்பதால்,உள்ளூர் திருமணத்தில் கலந்துகொள்ள நமதூருக்கு வருகைதந்துள்ள வெளியூர்வாசிகள் பள்ளியில் ஜமாத்துடன் ஜும்ஆ தொழுவது அறிய வாய்பாக கருதி கலந்து கொண்டார்கள்
 


பெண்களை  பள்ளிக்கு அனுமதியளிக்காத சூழலில் வாழும் இக்காலத்தில்,அவ்வெளியூர்வாசிகள், தங்களுக்கு இப்படி வாய்ப்பு கிடைத்ததை பெருமையுடன் சொல்லியும்தொழுகைக்கு பள்ளிவாசல் பெற்ற நமதூர் பெண்களை அல்லாஹ்வின் பாக்கியம் பெற்ற பெண்களாக வருனித்து பாராட்டினார்கள்.  மாஸா அல்லாஹ்.
        


    சகோதரர் ஹாபிழ் அப்துல் முகத்திம் பெண்களே, நீர் அச்சம் பெறுவீராக என்கிற தலைப்பில் தனது ஜும்ஆ உரையை நிகழ்த்தினார்கள்இன்றைய காலத்திற்கும்நமதூர் நிகழ்நடப்புக்கும் இணையாக செய்யப்பட்ட உரையாக கருதுகின்றோம்.  பெண்கள் பேனும் மஹ்ரம் பற்றி உரை என்கிற பயானில் விளக்கிநம் சகோதரிகளின் பேரில் மிகுந்த கவலைகளை வெளிப்படுத்தினார்கள்பயான் கேட்ட நமது சகோதரிகள் பயனடையனும் என்று நாம் துஆ செய்துக்கொள்ளுவோம் அல்லாஹ்வே போதுமானவன்.
            ஜும்ஆவின் இறுதியில்தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரண்டு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. சிறுவர்சிறுமியர் களுக்குண்டான பாலர் மத்ரஸா ரமலானுக்குப்பின் 01-09-12திறக்கப்படுகிறது என்றும் பெண்களுக்கான குர்ஆன் தஜ்வீத் பயிற்சி,மார்க்க வகுப்புகள் பிரதி திங்கள்வியாழன் (பிற்பகல் 2.00-04.30)வழக்கமாக இன்ஷா அல்லாஹ் இனி நடைபெறும் என்பதாகும்.

தகவல் மின் அஞ்சல் மூலமாக
AGM BASHA 9655411997.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக