Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

மியான்மர் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு உதவிகளை வழங்குகிறது சவுதி அரேபியா


மியான்மர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு, 250 கோடி ரூபாய் பெறுமானமுள்ள உதவிகளை வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளது.

மியான்மர் நாட்டில் வங்கதேச எல்லையையொட்டி அமைந்துள்ள ரகின் மாகாணத்தில், கடந்த ஜூன் மாதம் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டது.

ரகின் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில்  எட்டு லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

இவர்கள் மியான்மரில் குடியுரிமை கேட்டு போராடி வருகின்றனர். மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களை வங்க தேசத்திலிருந்து சட்ட விரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் என்ற தவறான குற்றச்சாட்டின் பேரில் குடியுரிமை அளிக்க மியான்மர் அரசு மறுத்து வருகிறது.

இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் முஸ்லிம்களின் குடிசைகளை தீ வைத்து கொளுத்தி விட்டதாகக் கூறி, பெரிய அளவில் கலவரம் மூண்டது. இதுவரை 50 பேர் பலியாகினர்.

இதையடுத்து மவுங்தா பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி ஏராளமான முஸ்லிம்கள்  வங்கதேசத்துக்குள் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

மியான்மரில் உள்ள முஸ்லிம்கள் அந்நாட்டு இராணுவத்தால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதை இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கண்டித்துள்ளன.

இதற்கிடையே இந்த மாநாட்டின் உறுப்பினரான சவுதி அரேபியா கலவரத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் முஸ்லிம்களுக்கு, 250 கோடி ரூபாய் பெறுமானமுள்ள உதவிகளை அறிவித்துள்ளது.

இந்த நிவாரணப் பொருட்களை உடனடியாக மியான்மருக்கு அனுப்ப, சவுதி மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.

தகவல் சௌதியில் இருந்து நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக