Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

அசாமில் உள்ள முஸ்லிம்களுக்காக நமதூரில் வசூல்



நமதூரில் இன்று முஸ்லிம் லீக் சார்பாக அசாமில் உள்ள முஸ்லிம் மக்களுக்காக வேண்டி வசூலில் இறங்கிஉள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இன்று ஜும்மா தொழுகைக்கு பின்னர்  முஸ்லிம் லீக் சார்பாக அசாமில் உள்ள முஸ்லிம் மக்களுக்காக வேண்டி அறிவிப்பு செய்து பின்னர் வசூலும் செய்யப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளாக எந்த ஒரு பொது சேவையில் அதிகம் ஈடுபாடில்லாமல் இருந்த இஸ்லாமிய பெரிய கட்சியான முஸ்லிம் லீக் தற்போது இந்த பொது சேவையில் ஈடுபட்டிருப்பது மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை ஏற்படுதிள்ளது.
இந்திய அளவில் இஸ்லாமியர்களின் செல்வாக்கு மிக்க கட்சியான முஸ்லிம் லீகில் உள்ளவர்கள் அனைவரும் இதற்க்கு எதிராக  குரல் கொடுத்தாலே போதும் பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பவர்கள் மனதில் சற்று அச்சம் ஏற்ப்படும். பாதிக்கப்பட்ட மக்களிடையே தன்னம்பிக்கை ஏற்ப்படும் நமகென்று குரல்கொடுக்க ஒருகூட்டமே காத்திருக்கிறது என்று. ஆனால் சமிப காலமாக அவர்கள் பொது சேவையில் ஈடுபடாமல் இறந்ததும் இளைய தலைமுறைகளுக்கு வழிவிடாமல் முதியவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பதும் தான் இவர்களுக்கு தோய்வு ஏற்ப்பட்டது இதனால் அனைத்து கட்சியினரும் இவர்களை பொருட்படுத்தாமல் ஒன்று அல்லது இரண்டு சீட்டு மட்டுமே கொடுகின்றனர். அதையும் இவர்கள் ஒப்புக்கொண்டு அவர்களோடு இவர்களும் வசைபாடி கொண்டிருக்கின்றனர். 12 சீட்டுக்கு மேல் பெற்ற இவர்கள் தற்போது ஒன்றுக்கும் இரண்டுக்கும் அல்லல் படுகின்றனர். கிடைத்த இடத்தில் இவர்களின் பொதுப்பணி என்னேவென்பது அந்த ஏரியா மக்கள் அறிந்ததே! 
நேற்று முளைத்த காளானாக கருதப்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், முஸ்லிம் முன்னேற்ற கழகம், பாபுலர் பிரான்ட் ஆப் இந்தியா, மற்றும் சில இஸ்லாமிய கட்சிகளை ஒப்பிடுகையில் இவர்கள் பணி இன்னும் அதிவிரைவாகவே செயல் படவேண்டும். இளைய தலைமுறைகளுக்கு அதிகம் இடம்கொடுத்து பொது சேவைகளில் அதிகம் நாட்டம் செலுத்த வேண்டும் அப்பொழுதுதான் காய்தேமில்லத் அவர்கள் ஆட்சி அமைத்தது போல் அமைக்க முடியும் 
நமது நிருபர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக