Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 6 செப்டம்பர், 2012

ஈரான் மீது தாக்குதல் நடந்தால் 35 அமெரிக்கா ராணுவ தளங்கள் நிர்மூலமாக்கப்படும்...


டெஹ்ரான்: எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அடுத்த சில நிமிடங்களிலேயே ஈரானை சுற்றியிருக்கும் 35 அமெரிக்க ராணுவ தளங்கள் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் நிர்மூலமாக்கப்படும் என்று ஈரான் விமானப்படை கமாண்டர் அமிர் அலி ஹாஜிஜதே எச்சரித்துள்ளார்.
ஈரான் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துகிற அடுத்த சில நிமிடங்களியே ஈரானைச் சுற்றி அமெரிக்கா அமைத்துள்ள 35 ராணுவ தளங்களையும் நிர்மூலமாக்கக் கூடிய வகையில் ஏவுகணை தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரானின் ஏவுகணைகள் இந்த தளங்களை சில நிமிடங்களில் சென்று தாக்கி அழித்து விடக் கூடியவை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எந்த ஒரு அமெரிக்க ராணுவ தளத்தையும் விட்டுவைக்கமாட்டோம்.


இதேபோல்தான் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேலிய படைகளையும் இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும். இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா ராணுவ தளங்களை அமைத்திருப்பது எங்களுக்கு அச்சுறுத்தல் அல்ல..இன்னும் சொல்லப்போனால் ஈரான் படைகள் தாக்குவதற்கான ஒரு "சந்தர்ப்பத்தை" யே அவைகள் ஏற்படுத்தியிருக்கின்றன என்றே கூறலாம் என்றார் அவர்.
விவகாரம் எனன்?
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது ..இது பயங்கரவாதிகளின் கைகளுக்கு சென்றுவிடும் என்று கூறி அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்திருக்கின்றன. இந்தத் தடையை பின்பற்றுமாறு ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளையும் இவை நிர்பந்தித்து வருகின்றன. இந்நிலையில் உலகின் 40 விழுக்காடு எண்ணெய் போக்குவரத்து நடக்கக் கூடிய ஈரானுக்கு சொந்தமான ஹோர்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் அறிவித்தது. இதற்கான சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதில் ஈரான் உறுதியாக இருப்பதைத் தொடர்ந்து கூடுதல் படைகளை வளைகுடா நாடுகளில் அமெரிக்கா குவிக்கத் தொடங்கியது. அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலும் ஈரான் மீது போருக்குத் தயாராகி வருகிறது.
இந்நிலையில் ஈரான் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.ஷகாப் 1,2,4 போன்ற ஏவுகணைகளை எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக சென்று தாக்கும் வகையில் தொடர்சியாக சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. பியாம்பர்- இ- ஆசாம் என்ற பெயரில் குறுகிய, நடுத்தர, நீண்ட தொலைவு ஏவுகணைகளை மத்திய ஈரான் பகுதியில் இருந்து நான்குபுறம் கற்பனையான எதிரி இலக்கை நிர்ணயித்து அதன் மீது ஏவி சோதனைகளை நடத்துவது அப்பிராந்தியத்தில் கூடுதல் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக