Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

நமதூரில் பள்ளி கூடங்கள் வண்டவாளம்!


நமதூரில் பள்ளி கூடங்கள் வண்டவாளம்!
நமதூரில் இஸ்லாமிய கல்வியும் இங்கு உண்டு என்ற போர்வையில், குழந்தைகள் சிந்தனைகளை முற்றிலும் தடம்புரள வைக்கிறது சில கல்விக்குடங்கள். அனைத்து பள்ளிக்கூடங்களிலும் ஆண்டுவிழா என்ற பெயரில் ஆட்டம் பாட்டம் என்று இஸ்லாமுக்கு எதிராக வேறு சிந்தனைக்கு கொண்டுசெல்வதுண்டு. அதையும் சிலர் நியாயப்படுத்துகின்றனர். இதை எங்களிடம் நியாயப்படுத்தலாம் ஆனால் மறுமையில் முடியாது. இது ஒருபுறம் இருக்க இதும் மிஞ்சியது இப்போதுள்ள கலாச்சாரம்!
குழந்தைகளை கோயில் படங்களை ஓட்டசொல்வது, இந்து கலாச்சாரம் மற்றும் பண்டிகைகளை விலாவரியாக சார்ட் அட்டையில் ஒட்டி விளக்கமாக அதை குறிப்பிட செய்வது, போன்றவைகளை அப்துல்லசா பள்ளிகூடங்கள் செய்துவருகிறது. இதில் இஸ்லாமியர்களின் கலாச்சாரம் எதயும் குறிப்பிட படவும் இல்லை! 
இதையும் மிஞ்சியது ஆசியா பள்ளி கூடம்.
நந்தி சாமி சிலைகளை ஐந்தாம் படிக்கும் குழந்தைகளை வரைய சொல்லயுள்ளனர். அதையும் தெளிவாக சார்ட்டில் வரைய வேண்டுமாம்.
இஸ்லாமிய கல்வியை கொடுக்க வேண்டிய இவர்களே, தவறான பதையில் செல்வதை நிறுத்தவேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியும் இஸ்லாமிய ஒழுக்கமும் வேண்டும் என்பதினால்தான் இஸ்லாமிய கல்விகூடங்களில் சேர்கின்றனர், இந்த கல்விகூடமும் மாற்றுமத கல்விக்கூடம் போல் இருந்தால் இதைவிட சிறந்த மாற்றுமத கல்வி நிறுவனத்தில் குழந்தைகளை சேர்க்க நேரிடும். (அல்லாஹ் நம் அனைவரின் குழந்தைகளை நேர் வழியில் நடத்துவானாக!)
கல்விக்கூடங்கள் லாப நோக்குடன்தான் அனைவரும் நடத்திவருகின்றனர். இதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல! என்பதுதான் நமக்கு நன்றாக தெரியவருகிறது!
நமது நிருபர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக