Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

நமதூரில் குரங்கு அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது.


நமதூரில் குரங்கு அட்டகாசம்  தலைவிரித்து ஆடுகிறது.
நமதூரில் குரங்குகள் அதிகமாக உள்ளது தாங்கள் அறிந்ததே ! ஆனால் அது இப்போது நமதூரை அட்டகாசம் செய்து வளம் வருகிறது.
வீட்டில் உள்ள அரிசிகளை கூட வலுகட்டாயமாக எடுத்துக்கொண்டு செல்கிறது. இந்த அநியாயத்தை தட்டிகேட்க யாருமில்லையா.....
தெருவில் உள்ள பொதுமக்கள்: நாங்க மொட்டமாடில எதுவும் காயப்போட முடில. எதுபோட்டாலும் அதை நாசமாக்கி விட்டு போய்விடுகிறது.
பெட்டி கடை காரர்கள்: ஒரு முட்டைய கூட வெளீல வைக்கமுடில வாயிலே கைலேன்னு எடுத்துட்டு போய்டுது (கைல கெடச்சுது செத்துச்சு).
சிறுவர்கள் : கல்லால அடுச்சா உர்ர்ருன்னு கடிக்க வருது. வாழைபழம், முட்டாய் ஏதாவது திண்ணா புடிகிட்டு போய்டுது.
குட்டி குரங்கு : அம்மா எனக்கு சோறு வேணும்.
அம்மா குரங்கு : (தன் புருசனிடம்) ஏங்க புள்ளைக்கு சோறு வேணுமாம்!
அத்தா குரங்கு : எந்தவீட்டு சோறு வேணும்னு சொல்லு! அந்த வீட்ல போய் நாசம் பண்ணி புள்ளைக்கு சோறு கொண்டு வரலாம், எவண்டி நம்மள கேப்பான். பஞ்சாயத் அலுவலகத்திலிருந்து வந்து நம்மள புடிசிடுவார்களா? முடிந்தால் முடித்து பார்க்கட்டும்!
இப்படி பட்ட சவால்களை சந்திக்க தயாரா?  நமது பேரூராட்சி தான் பதில் சொல்ல வேண்டும்.
நமது நிருபர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக