Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 15 செப்டம்பர், 2012

கொட்டும் மழையிலும் பாபுலர் பிரான்ட் பொதுக்கூட்டம் நடந்தது.

 நேற்று நமதூரில் பலத்த காட்ருடன் கூடிய மழை பொழிந்தது.

நேற்று சுமார் 8 மணி அளவில் பலத்த காற்று வீசியது பின்பு ஒரு சில நேரேங்களுக்கு பிறகு பலத்த மழையும் பொழிந்தது.
இதனால் நேற்று அறிவிக்கபட்டிருந்த பாபுலர் பிரான்ட் பொதுக்கூட்டம் தடை பட்டுவிடும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது, ஆனால் இந்த அடைமழையிலும் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தேறியது. இந்த கூட்டம் ஆரம்பம் செய்வதற்கு முன்னதாகவே அதிவிரைவுப்படை நமதூருக்கு வந்திறங்கியது. இந்தகூட்டம் அடைமழையிலும் சற்று காரசாரமாகவே நடைபெற்றது. ஒருசில கயவர்கள் இந்த கருத்துக்களை கவனிக்கவிடாமல்  இதை திசைதிருப்ப முயற்சி செய்தனர், இருப்பினும் பேசக்கூடிய நபர் இதுவும் ஒருவித சதியே, எதுநடந்தாலும் நீங்கள் கருத்துக்களை கூர்ந்து கவனயுங்கள் என்று கூறியது, அவர்களுக்கு மிகவும் எரிச்சலை உண்டாக்கியது.
முடிவாக எதிரிகளுக்கு ஒரு சவாலும் விடப்பட்டது. 
இதில் ஹிந்து முன்னணி காரன் அப்துல் கலாம்மிடம் (முன்னால் ஜனாதிபதி) கூறுகின்றான். கசாபை தூக்கிளிடுவதோடு மட்டுமில்லாமல், மாறுகால் மாறுகை வாங்கி இரு கண்களையும் பிடுங்கி எடுத்து தெருவில் நடக்க விடவேண்டும் அப்படி நீ அறிவிப்பு செய்தால், நீ ஒரு தேச பக்தி உடையவன் என்று ஒப்புகொள்கிறோம் அப்படி இல்லையென்றால் நீயும் ஒரு தேச துரோகி. என்று கூறுகின்றான். இவர்களுக்கு பதில் கூறும் விதமாக ஓ இந்து முன்னணி காரர்களே குஜராத்தில் பல அப்பாவி முஸ்லிம் பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்து, வயற்றில் இருக்கும் சிசுவைக்கூட கொலை செய்ய தூண்டுகோலாக இருந்த நரேந்தரமோடியை மாறுகால் மாறுகை வாங்கி இரு கண்களையும் பிடுங்கி எடுத்து தெருவில் நடக்க விடவேண்டும் அப்படி நீ அறிவிப்பு செய்தால், ஹிந்து முன்னணி காரர்களே  நீங்களும்  ஒரு தேச பக்தி உடையவர்கள் என்று ஒப்புகொள்கிறோம் அப்படி இல்லையென்றால் நீங்கள் ஒரு தேச துரோகிதான். என்று கூறப்பட்டது கொட்டும் மழையில் கடயொரங்களில் நின்று பொதுமக்கள் கூட்டத்தை கவனித்து கொண்டிருந்தனர். முடிவாக காவல் துறைக்கு இவர்களது வழக்கம்போல் நன்றி கூட கூறாமல் முடிக்கப்பட்டது.
நமது நிருபர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக