Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 10 செப்டம்பர், 2012

TNTJ LABBAIKUDIKADU அமீரக சந்திப்பு

07-SEP-12.jpg
TNTJ LABBAIKUDIKADU அமீரக சந்திப்பு

ஏக நாயன் அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  லெப்பைக்குடிக்காடு ஊர் கூட்டமைப்பின் வழமையான மாதாந்திர  அமர்வின் செப்டம்பர் மாத அமர்வு  07/09/2012 வெள்ளிக்கிழமை மஃரிப்  தொழுகைக்குப்பின் 07:00 மணி முதல் இஷா வரைதுபை மண்டல தலைமை  மர்கஸில் நடைப்பெற்றது.

இதில் ஏராளமான கொள்கைச் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



சகோதரர் T.M.பஷீர் அஹம்மது அவர்களுடைய துவக்க உரையுடன் அமர்வு  துவங்கியது.  அதைத் தொடர்ந்து இறை நினைவூட்டலான மார்க்க பயான்  செய்யப்பட்டது.
சகோதரர் T.M.பஷீர் அஹம்மது அவர்கள் மரணம் தரும் படிப்பினை என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.இதில் மனிதனுக்கு மரணத்தின்போது ஏற்படும்  வேதனைப் பற்றியும், மரணத்திற்க்குப் பிறகு கப்ரின் நிலை மற்றும் கப்ரின்  வேதனை  குறித்தும்  சிறப்பான ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்.  இந்த பயான் இன்றைய சூழ்நிலைக்கு தகுந்ததாகவும்,மரண பயமின்றி  உலகமாயையில் மூழ்கிகிடப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும்  அமைந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு மாத கால செயல்பாட்டு அறிக்கையை ஊர்
07-SEP-9.jpg
கூட்டமைப்பின் பொருப்பாளர்களால் வாசிக்கப்பட்டது.

இதில் தாயகத்தில் நடைப்பெற்ற காரியங்கள், ஜூம்ஆ உரை, தெருமுனைப் பிரச்சாரம், வாராந்திர நோட்டீஸ், தர்பியாக்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழுவின்
விபரங்கள்,மாவட்ட செயல்பாடுகள், மாவட்டத்தின் பிறகிளைகளின்  செயல்பாடுகள், சமுதாய நிகழ்வுகள் அனைத்தும் அமர்வில் தொகுத்து  வாசிக்கப்பட்டன.
ரமளானின் செயல்பாடுகள் பற்றியும், நோன்பு கஞ்சி, ஃபித்ரா, போன்ற  செயல்பாடுகள் குறித்தும் அறிக்கைகள் வாசிக்கப்பட்டன.
இந்த வருடம் நமதூர் சார்பாக மட்டும் ரூபாய் 100850 மதிப்பில் 507 குடும்பங்களுக்குஃபித்ரா விநியோகம் செய்ய்யப்பட்டது.
நமதூர் மற்றும் நமதூரைச் சுற்றியுள்ள குன்னம்,புதுப்பேட்டை, திருமாந்துறை கைகாட்டி, கீரனூர், ரஞ்சன்குடி, தேவையூர், வாலிகண்டபுரம்,வல்லாபுரம்  ஆகிய ஊர்களுக்கும்லெப்பைக்குடிக்காடு கிளை சகோதரர்களால் ஃபித்ரா  விநியோகம் செய்யப்பட்டதை அறியத்தந்தனர்.
இதுபோல் ரமளான் மாத அறிவுப்போட்டி மற்றும் இரவு தொழுகைக்குப்பிறகு  நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள்வழங்கப்பட்டதையும் தெரிவிக்கப்பட்டது.
07-SEP-6.jpg
பெயர் குறிப்பிட விரும்பாத நமதூர் தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரர்  ஒருவர் கொடுத்த 2 இலட்சம் ரூபாய் நன்கொடை லெப்பைக்குடிக்காடு கிளை  நிர்வாகிகள் மூலமாக வி.களத்தூர், மற்றும் புதுஆத்தூர் மர்கஸ்களுக்கு (தலா 1  இலட்சம்  ரூபாய்) மர்கஸ் கட்டிட‌ நிதியாக 29/08/2012 அன்றுநன்கொடையாக  வழங்கப்பட்டதும் தெரிவிக்கப்பட்டது.

இவைகளையெல்லாம் கலந்துக்கொண்ட சகோதரர்களிடம் எடுத்துச் சொல்லப்பட
அவர்களிடம் மென்மேலும் ஆர்வம் மேலிட்டதைக் காண முடிந்தது.
வட்டி இல்லா கடன் திட்டம் மூலம் தேவையுள்ள சகோதரர்களுக்கும்,  விண்ணப்பித்த சகோதரர்களுக்கும் பொருளாதார உதவிகள் செய்யப்பட்டன.
துஆவுடன் அமர்வு இனிதே நிறைவுபெற்றது!அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!
அனுப்புநர் :அமீரகம் சாதிக் பாஷா TNTJ (LABBAIKUDIKADU )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக