Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 20 செப்டம்பர், 2012

நமதூரில் முழு கடை அடைப்பு.

நமதூரில் முழு கடை அடைப்பு.
 19-09-2012 இன்று நமதூரிலும் எதிர்கட்சி மற்றும் வணிகர் சங்கம் நடத்தும் முழு கடைஅடைப்பு நிகழ்ந்துள்ளது. 

பால்விலை, மின்கட்டணம் விலை மற்றும் பேருந்து விலைகட்டணம் போன்றவைகளை கருத்தில் கொண்டு எதிர்கட்சிகள் வணிகர் சங்கம் மற்றும் இதர சில அமைப்புகளும் இணைந்து முழு கடை அடைப்பு போராட்டம் அறிவித்ததின் விளைவாக இன்று நமதூரில் முழு கடைஅடைப்பு நிகழ்ந்துள்ளது. 

இதனால் இரண்டு நாட்களுக்கு முன்பே பள்ளிகள் விடுமுறை என்று அறிவிப்பு கொடுக்கபட்டிருந்த
நிலையில், நேற்று பள்ளிகள் விடுமுறை
இல்லை என்று அரசு உத்தரவு பிரபித்தது. இதனால் பள்ளி குழந்தைகள் முகத்தில் நேற்று துக்க நிலையே காணப்பட்டது. காரணம் விடுமுறை என்று சொல்லியதால் வீட்டுபாடம் செய்யாமல் இருந்திருக்கும். இதனால் இன்று அணைத்து பள்ளிகளும் வழக்கம்போல் நடைபெற்றது ஆனால் விஸ்டம் பள்ளிக்கூடம் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை  மட்டும் பள்ளி வரசொல்லிஉள்ளனர். மற்ற மாணவ மாணவியருக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 


மருந்து கடைகள் சில கடைகள் திறந்துள்ளனர் இருந்தாலும் ஒருசில பெட்டிக்கடைகளும்  திறந்த நிலையில் உள்ளனர். மேலும் காவல்துறை சிலபேர் பொதுமக்களுக்கும், கடைகாரர்களுக்கும் பாதுகாவலாக உள்ளனர் .

நமது நிருபர். 

1 கருத்து:

  1. டீசல் விலை உயர்வு, சிலிண்டருக்கு விநியோகத்தில் புதிய கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றை கண்டித்து எதிர்கட்சிகள் சார்பாக முழு கடை அடைப்பு போராட்டம்
    நடைபெற்றது.

    பதிலளிநீக்கு